எண்ணெய் பொரிகடலை செய்வது எப்படி?

எண்ணெய் பொரிகடலை என்பது அடுப்பில் வைத்து சமைக்காமல் கலந்து உண்ணக் கூடிய சிற்றுண்டி வகை ஆகும். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

எங்கள் ஊரில் மழை காலத்தில் மழை பெய்து கொண்டிருக்கும் போது இதனை தயார் செய்து உண்பர்.

இது குளிருக்கு இதமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியதாகவும் இருக்கிறது. இதனை எண்ணெய் கல்லை என்றும் கூறுவர்.

அடுப்பில் சமைக்காத சாலட் போன்ற ஆரோக்கியம் அளிக்கும் உணவு வகையான இதனை நீங்களும் செய்து பயன் பெறுங்கள்.

இனி சுவையான எண்ணெய் பொரிகடலை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உருட்டு பொரிகடலை – 3 குழிக் கரண்டி அளவு

 

மொறு மொறு உருட்டு பொரிகடலை
மொறு மொறு உருட்டு பொரிகடலை

 

சின்ன வெங்காயம் – 12 எண்ணம்

சீரகம் – 2 ஸ்பூன் அளவு

உப்பு – தேவையான அளவு

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன் அளவு

செய்முறை

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

சுத்தம் செய்த வெங்காயத்தை சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

 

சதுரங்களாக்கிய சின்ன வெங்காயம்
சதுரங்களாக்கிய சின்ன வெங்காயம்

 

வாயகன்ற பாத்திரத்தில் உருட்டு பொரிகடலையை எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அதனுடன் சீரகத்தை கைகளில் வைத்து கசக்கி சேர்க்கவும்.

 

பொரிகடலையுடன் கசக்கிய சீரகத்தைச் சேர்த்ததும்
பொரிகடலையுடன் கசக்கிய சீரகத்தைச் சேர்த்ததும்

 

பின்னர் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம், தேவையான உப்பு, நல்ல எண்ணெய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

 

கலவையில் சின்ன வெங்காயம், உப்பு சேர்த்ததும்
கலவையில் சின்ன வெங்காயம், உப்பு சேர்த்ததும்

 

நல்ல எண்ணெய் சேர்த்து கிளறியதும்
நல்ல எண்ணெய் சேர்த்து கிளறியதும்

 

கலவையை நன்கு ஒரு சேரக் கிளறவும்.

பத்து நிமிடங்கள் அப்படியே ஊற விடவும்.

பத்து நிமிடங்கள் கழித்து உண்ணவும்.

சுவையான எண்ணெய் பொரிகடலை தயார்.

 

சுவையான எண்ணெய் பொரிகடலை
சுவையான எண்ணெய் பொரிகடலை

 

இதனை சிறுவர்களுக்கு பள்ளி விட்டு வந்ததும் மாலை சிற்றுண்டியாகவும் செய்து கொடுக்கலாம்.

இதில் உள்ள சின்ன வெங்காயம் மற்றும் பொரிகடலை சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும்.

எனவே மழைகாலத்தில் இதனை சிறுவர்களுக்கு அடிக்கடி செய்து கொடுத்து இயற்கை முறையில் நோய் தடுப்பாற்றலைப் பெறுங்கள்.

குறிப்பு

காரம் விரும்புபவர்கள் மிளகாய் வற்றலை கிள்ளி கலவையுடன் சேர்த்து ஊற வைத்து உண்ணலாம்.

விரும்பமுள்ளவர்கள் கறிவேப்பிலை சிறிதளவை பொடியாக நறுக்கி கலவையுடன் சேர்த்து ஊற வைத்து உண்ணலாம்.

எண்ணை கல்லைக்கு மொறு மொறுப்பான பொரிகடலையைச் சேர்க்கவும். அப்போது தான் சாலட் சுவையாக இருக்கும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.