உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது!

உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது – ஆனால்
நீயின்றி என்னால் சுவாசிக்கக் கூட முடியாது

உனக்கு என்னை ஸ்பரிசிக்கத் தெரியாது – ஆனால்
நான் கொண்ட ஸ்பரிசம் விவரிக்க முடியாது

உனக்கு என்னை வருணிக்கத் தெரியாது – ஆனால்
எனக்கு உன்னை வருடாமல் வாழ முடியாது

கேட்காமல் எதுவும் நீ செய்ததில்லை – ஆனால்
கேட்டு எதையும் நான் பெற்றதில்லை

உன்னிடம் ஒளிவு மறைவு இல்லாமல் இல்லை – ஆனாலும்
உன்னிடம் ஓடி ஒளியும் பாங்கு என்னிடமில்லை

கண்டால் வரும் காமம் நீ
காணாது வரும் காதல் நான்

உண்ணும் போது ஊட்டியதில்லை
உறவுகளின் முன் உயர்த்தியதில்லை – ஆனாலும்
நீ எண்ணியபோது உன்னை நான் வாட்டியதில்லை

என்னை நேசித்தால் உன்னை நேசிப்பேன் என்று கூற
நான் உந்தன் காதலி அல்ல…
நீ கரம் பிடித்துக் கட்டிய மனைவி!

சுகன்யா முத்துசாமி

தந்தையுடன் சுகன்யா முத்துசாமி
தந்தையுடன் சுகன்யா முத்துசாமி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.