என் கையை விடமாட்டிங்கப்பா

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் தொங்கு பாலத்தைக் கடக்க முயற்சி செய்தனர்.

தந்தை சொல்கிறார் “என் கையைக் கெட்டியாப் பிடிச்சிக்கோ”

மகள் சொல்கிறாள் “நீங்க, என் கையைப் பிடிச்சிக்கோங்க”

“ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்?” தந்தை கேட்கிறார்.

“நான் உங்கள் கையைப் பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் பதட்டத்தில் கையை விட்டுவிட வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் நீங்கள் பிடித்தால் எந்த ஒரு நிலையிலும் என் கையை விடமாட்டிங்கப்பா” என்றாள் மகள்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.