கனவு – கவிதை

தளத்தில் நின்றவனை துரத்திய போராட்டம்

வரைபவனின் கருவிற்கு வண்ணம் தீட்டிய திறமை

பேச முடியாதவனுக்கு எழுத்தாய் மாறிய சொற்கள்

கேட்காதவனுக்கு சைகையாகிய உணர்வு

பாடுபவனுக்கு வரியான வலிகள்

இசைப்பானுக்கு ஒலியாகிய கண்ணீர்

ஆடுபவனுக்கு ஜதியாகிய அழுத்தம்

எல்லாம்…

ஒன்றை நோக்கிய பயணம் மட்டுமே

அதுவே கனவு

அவனை அவனாய் காட்டும்

கண்ணாடி!

கு.சிவசங்கரி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.