காத்திருத்தல் – கவிதை

எல்லா திசைகளிலும் 
திரும்புகிறது அவன் மனம் 

அது ஒரு காட்சியை
ஒரு பொருளை 
ஒரு அர்த்தத்தை

எரியும் தீபத்தின்
ஒளியெனப் பாய்ச்சுகிறது

உடலைச் சுமந்த அவனுடன்
வீணான கணத்தில்
உலகுடன் பேசுவது யார்

பாதையை வடித்த நிர்ப்பந்தங்கள்
ஏற்றமும் இறக்கமுமாக
பயணத்தை நடத்தியது

இடைவிடாத வாழ்க்கை
துண்டிக்காத மின்சாரம் 
ஓடும் நதி
கரையும் காலம் என
காத்திருந்தான்

புஷ்பால ஜெயக்குமார்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.