காரச் சேவு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

கடலை மாவு : 2 கிலோ

சோடாஉப்பு : 1 சிட்டிகை

டால்டா : 200 கிராம்

மிளகாய்தூள் : 10 கிராம்

நல்லெண்ணெய் : 500 கிராம்

பெருங்காயம் : சிறிதளவு

மிளகு பொடி : சிறிதளவு

உப்பு : சிறிதளவு

வெள்ளபூடு பொடி : சிறிதளவு

அரிசிமாவு : 100 கிராம்

 

செய்முறை

கடலைமாவு, அரிசிமாவுடன் மிளகாய்தூள், பெருங்காயம் பூடு மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். உப்பு, தண்ணீர் சேர்த்து கட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் காரச் சேவு தேய்க்கும் கரண்டியில் சிறிதளவு மாவை வைத்து நன்றாக அழுத்தி தேய்க்கவும். மற்றொரு கரண்டியால் சேவை திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய வைக்கவும். சுவையான காரச் சேவு ரெடி!

(முறுக்கு குழலில் பிழிந்து தயார் செய்தும் உதிரியாக்கி கொள்ளலாம்.)