பச்சை மரம் தேடி
இச்சை கொண்டு
அமரும் வண்ண கிளிகளே!
பச்சை மாமலை மேனியனிடம்
என் நெஞ்சு அவனை
இச்சைக் கொண்டதென
உம் கொஞ்சும் மொழியாலே
அவன் நினைவில் புகச் செய்வீர்.
பறந்து விளையாடி கிளர்ந்து
எழில் கூட்டும் எனது அகமொழியை,
விரைந்து தூது சென்று செப்பும் –
மாயன் நினைவு மாறும் முன்னே…
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
Super