குழாய்ப்புட்டு செய்வது எப்படி?

செய்முறை

இடியாப்ப மாவில் சிறிது உப்புத்தண்ணீர் தெளித்து புட்டு மாவு தயார் செய்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி கொள்ளவும்.

புட்டுக் குழலில் முதலில் தேங்காய்ப்பூவைப் போட்டு அடுத்து ஒரு கை மாவு போட்டு அடுத்து சீனி கொஞ்சம் தூவவும். அடுத்து தேங்காய்ப்பூ தூவவும்.

பழையபடி மாவு, சீனி, தேங்காய்ப்பூ இவ்வாறு குழாயின் மேல் பாகம் வரை நிரப்பி மூடி, கலயத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி குழாயை அதில் பொருத்தி வேக வைக்க வேண்டும்.

மூடியிலுள்ள தூவாரத்தின் வழியாக ஆவி வந்ததும் குழாயை எடுத்து அடிப்பக்கத்திலிருந்து ஒரு குச்சியால் புட்டை வெளியே தள்ளவும். சுவையான குழாய்ப்புட்டு ரெடி!