வாழ்விற்கான பொன்மொழிகள்

அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியால்லாத ஆசையால் பயனில்லை.

முயற்சி செய்து செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

ந‌ம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.

அதிகம் பேசாதாவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்று விடும்.

தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக் கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

 எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

சண்டைக்குப்பின் வரும் சமாதானத்தைவிட என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி. அழகான பசி. ஒருமுறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

One Reply to “வாழ்விற்கான பொன்மொழிகள்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.