சில பொன்மொழிகள்

பொய் சொல்லி தப்பிக்காதே,

உண்மையை சொல்லி மாட்டிக்கொள்,

பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது!

விவேகானந்தர்

இதயம் சொல்வதை செய்;
வெற்றியோ தோல்வியோ
அதை தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு

விவேகானந்தர்

தன்னை அறிந்தவன் ஆசை பட மாட்டான்

உலகை அறிந்தவன் கோவ பட மாட்டான்

இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்ப பட மாட்டான்

பகவத் கீதை

யார் என்ன சொன்னாலும்

உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே

ஒரு சமயம் நீ மாற்றினால்

ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்

கண்ணதாசன்

வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்,

நல்ல நண்பர்கள் தேவை

வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால்,

ஒரு எதிரியாவது தேவை

– A.P.J.அப்துல்கலாம்

ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட ,

தோற்பது எப்படி என்று யோசித்து பார் ,

நீ ஜெயித்து விடுவாய்

ஹிட்லர்

அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள்

வெற்றி உன்னை தேடி வரும்

– A.R.ரகுமான்

தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்

வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்

நெப்போலியன்

கோவம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு ,

உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை ,

புத்தர்

விதைத்தவன் உறங்கினாலும்

விதைகள் உறங்குவது இல்லை!

காரல் மாக்ஸ்

வெற்றி இல்லாமல் வாழ்க்கை இல்லை,

வெற்றி மட்டுமே வாழ்க்கை இல்லை,

பில்கேட்ஸ்

வெற்றிகளை சந்தித்தவனின் இதயம்

பூவை போல் மென்மையானது

தோல்வி மட்டுமே சந்தித்தவனின் இதயம்

இரும்பை விட வலிமையானது

விவேகானந்தர்

நீ பட்ட துன்பத்தை விட

அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

விவேகானந்தர்

தோல்விக்கு இரண்டு காரணம்

ஒன்று யோசிக்காமல் செய்வது

இரண்டு யோசித்த பின்னும் செய்யாமல் இருப்பது

கிருஷ்ணர்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.