தேவை காத்திருப்பு

சம்பா நெல்லை உரலில் குத்திடும்
ஒலிக்கு இசைவாக
காங்கேய காளை கழுத்து மணியாட…

பாட்டியின் கையில் முறத்தினில் அரிசி
பரத நாட்டியம் ஆடிடும் இயல்பாக…

வேம்புமரத் தூளியிலே கடைக்குட்டி தம்பிக்கு
தாலாட்ட சின்னவள் இருப்பாள் துணையாக….

இப்படியாக வாழ்ந்த தலைமுறை
இன்று எங்கே போனது தெரியவில்லை

இரண்டு உடல்கள் ஒரு வீடு…
அடுக்கு மாடி குடியிருப்பு…

அடுத்த வீட்டு நிலையறியா
அவலத்தில் மனித நிலையிருப்பு…

காலை மாலை லிஃப்டில் நுழைந்து
காரினில் பயணம் என வாழும்
வாழ்க்கையில் மனதில் தோன்றும் கடும் வெறுப்பு…

காலம் இழந்ததை மீண்டும் தர வேண்டுமெனில்
நமக்கு தேவை காத்திருப்பு…….

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.