நகைப்பாய் பேசிய
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
நடிப்பாய்ப் போகாமல்
பிடிப்பாய் விளைந்ததுவே
சூழியல் சிந்தனை
சூழ்ந்து கொண்டதால்
ஊழியல் காக்கட்டும்
உலகினை என்று
மரக்கன்றினை நன்றாய்
வைக்கச் சொன்னாயே
நீயும் கோடி மரக்கன்றை
வைக்கவும் முனைந்தாயே
மகத்தான மனிதர்களின்
சிந்தனை எப்போதும்
சிறந்த தென்பதை
செயலால் நிரூபித்தாயே
இயற்கையை நேசித்த
நற்சிந்தை மனிதனை
இயற்கை ஏனோ
நேசிக்க மறந்ததே
கவிதையின் வரிகளும்
கண்ணீர் சிந்துதே
புவிதனில் சிறந்த
மனிதனை இழந்ததால்
கண்களும் குளமாய்
கலங்கி நின்றதே
கருணை இழந்த
காற்றை நினைத்து
ஆகச்சிறந்த மனிதனுக்கு
ஆக்ஸிஜன் வழங்காமல்
நட்ட மரமனைத்தும்
பட்டு விட்டனவே
சிரிப்பின் இலச்சினை
இன்று சிதைந்துவிட்டதே
சிகரம்தொட்ட மனிதனின்
சடலம் சாய்ந்துவிட்டதே
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
கைபேசி: 6374836353