நலம் தரும் வழிகள்

கல்விக்கு உதவி செய்பவனும், ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு உதவுபவனும், அனாதை பிரேதத்தை அடக்கம் செய்பவனும் அஸ்வமேத யாக பலனை அடைகிறான்.

கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும். பகவானிடம் பக்தி கொள்ளல் வேண்டும்.

பேச்சைக் கட்டுப்படுத்துதல். சிந்திக்காமல் வாயில் வந்ததை சொல்லி விட்டு பிறரை நோக வைத்து விட்டு சிந்தித்து தானும் வேதனை படுவது முட்டான் தனம். பிறர் மனம் நோக பேசுவதோ வாழ்வதோ கூடாது.

எதற்கெடுத்தாலும் கவலைபடக் கூடாது. கவலையால் அழகு குலையும் மற்றும் வலிமை, அறிவு குறையும். நோய் உண்டாகும்.

கடவுளிடம் வேண்டாதே, உனக்கு என்ன தர வேண்டுமென்று அவருக்குத் தெரியும். பேராசை தீராத வியாதி.

இவை  நலம் தரும் வழிகள் ஆகும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.