நாள் – கவிதை

இன்று என்ன

நடக்கப் போகிறதோ

எனக்குத் தெரியாது

எப்படியும் நான்

இன்றை விழுங்கப் போகிறேன்

ஒரு நாளின் தொடக்கம் என்பது

எப்பொழுதும் அமைதியானது

என் இந்த நாளில்

யார் யார் வரப்போகிறார்கள்

என்ன என்ன கருத்துக்கள்

சொல்லப் போகிறார்கள்

ஒரு நாளை

எனது பயணத்தால்

நிறைவு செய்கிறேன்

திறந்த வெளியில்

இருக்கும் அறையில்

நான் நினைவு கூறப்பட்டேன்

அன்னாளில் இது நடந்தது என்று

ஒரு நாளை

ஒரு பகுதி போல்

பாவிக்கும் மனோநிலையை

எழுதினான் ஒருவன்

அன்றொரு நாள் என

அவன் வாழ்விலே

சொருகியிருந்த துருப்பு சீட்டை

எடுத்துக் காட்டினான்

அது ஒரு நாள் என அறிய

நான் நாட்காட்டியை நம்பவில்லை

ஆனால் அது அப்படித்தான் இருந்தது

புஷ்பால ஜெயக்குமார்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.