நினைவுக் குடைக்குள் – கவிதை

அது மகப்பேறு மருத்துவமனை

இளம் பிள்ளைகளிடம்

அத்தனை பயம்

கரம் முழுவதும்

மருத்துவ அட்டைகள்…

என் பழைய

நினைவுகளை

அகத்துக்குள் தூண்டி

கருச்சுமக்கும்

தாயாய் மாறிய அந்தநொடி …

இன்று

இனிமையைக் கூட்டித் தந்தாலும்…

அன்று இவர்களை

போல் நானும்

பயத்தில் இருந்த

தருணம்..

நினைவுக் குடைக்குள்

ஈரம் நனைத்து செல்கிறது

செ.புனிதஜோதி
சென்னை

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.