ஆறுகள் ஏரிகள் நெகிழியின் பிடியில்
அலறுதல் அறியா காதுகள் நிறைய…
நாற்றங்கால் தோறும் இரசாயன கலவையால்
சோறும் விஷமென மாறியது
அறியா தூங்கும் மனங்கள் பெருக…
நோய்களை அழிக்கும் திறனை
இழக்கும் மனிதா மனிதா…
கடந்து செல்லும் சாலைக்காக
பச்சை மரங்களை அழிப்பது
நியாயம் தானா?
நாளை காற்றும் கூட
காசுக்கே என்பது சாதனைதானா?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942