பட்டாணி சுண்டல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

காய்ந்த பட்டாணி : 3 கப்
கடுகு : 2 டீஸ்பூன்
பெருங்காயம் : 2 சிட்டிகை
கறிவேப்பிலை : சிறிதளவு
மிளகாய் வற்றல் : 6
தேங்காய்பூ : ¼ மூடி
உப்பு : தேவையானது
எண்ணெய் : 2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை

பட்டாணியை முதல்நாள் இரவே ஊறப் போடவும். மறுநாள் சுத்தமாக கழுவி, அதிகம் தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும். அதில் வெந்த பட்டாணியை கொட்டி தேவையான உப்பு போட்டுக் கிளறவும். பெருங்காயம் தூவவும். கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான பட்டாணி சுண்டல் தயார்.