பிறந்தேன் – கவிதை

பிறந்தேன் – பிறந்த பயன் (ஞானம்) கற்றேனா?

கற்றேன் – கற்றபடி (தர்மம்) நடந்தேனா?

நடந்தேன் – நடந்த வழி (நேர்மை) நின்றேனா?

நின்றேன் – நின்ற இடம் (நியாயம்) உணர்ந்தேனா?

உணர்ந்தேன் – உணர்ந்தவுடன் (உண்மை) நிலைத்தேனா?

நிலைத்தேன் – நிலைத்து சில (ஈகை) செய்தேனா?

செய்தேன் – செய்த பணி (புகழ்) களித்தேனா?

களித்தேன் – களித்தபடி (அமைதி) வாழ்ந்தேனா?

வாழ்ந்தேன் – வாழ்வதற்கே (கர்மம்) பிறந்தேனா?

முனைவர் த.தமிழ்செல்வம்
வேதபுரி

One Reply to “பிறந்தேன் – கவிதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.