புதுப் பொன்மொழிகள்

சினத்தை வெல்லு

குணத்தை அள்ளு

 

சேவல் முன் விழி

விழாது சோம்பல் பழி

 

ஆணவம் அழி

வெற்றிக்கு வழி

 

அன்பைக் கொடு தராளமாய்

அறிவை எடு ஏராளமாய்

 

முயற்சியை விடாதே

தளர்ச்சியை தொடாதே

 

படிக்க பாடுபடு

பயத்தை ஓடவிடு

 

அன்னையை மதி

தந்தையை துதி

 

மறந்திடு தீமையை

நினைத்திடு நன்மையை

 

உயர்ந்திட பணிந்திடு

உண்மையை உணர்த்திடு

 

புகழ் பெற

மனம் திற

 

கி.அன்புமொழி

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.