பெட்டி – கவிதை

ஆழத்திலிருந்தான் அவன் 

அடிக்கடி ஆழத்தில் அல்லது

மிக மோசமான பள்ளத்தில்

வீழ்ந்து விடுகிறான் அவன்

அவனது புரிதலுக்கு

இணையானது

பூமியில் ஏதுமில்லை

அவன் உள்ளுக்குள் இருக்கிறான்

தாந்தேயின் கோளத்தில்

உரசுகிறது அவன் உடல்

அவனது விலை மதிக்க முடியாத

அமைதி வீணாகிப் போகிறது

உடலைச் சுமந்த மனது

அர்த்தமற்ற நாகரிகத்தைப் பேணுகிறது

தொட்டுக் கொண்டே

பட்டுக் கொண்டே

இருக்கும் சிந்தனையில்

கைது செய்யப்பட்டவன்

இன்னும் விடுபடவில்லை

மெல்ல அணுகுகிறான்

மெல்ல நினைக்கிறான்

அவனது உறுதிப்பாட்டை

ஒரு பெட்டியை

வைத்துக் கொள்வது போல்

அவனே வைத்துக் கொள்கிறான்

புஷ்பால ஜெயக்குமார்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.