இயற்கை நிகழ்வுகளான
இடி மின்னல் வெள்ளம் நில
நடுக்கமென விளங்க முடியா
பலவற்றுக்குக் கடவுள் என்ற ஒன்றைப்
பதிலாக முன்னிறுத்துகிறான்!
மக்களும் அவ்வாறே பழகி விட
ஒவ்வொரு முறையும் அவர்கள்
கூற்று தவறென்று அறிவியல்
விளக்கிக் கொண்டிருக்கிறது!
ஒன்றை விளக்கினால்
அடுத்த ஒன்றிற்குத் தாவி விடுகின்றனர்.
நிரூபணமாகும் வரை அது
கடவுள் செயல்?
தா. நவீன்ராஜ்
திருவாளப்புத்தூர்
கைபேசி: 9715156480