மிளகு வடை செய்வது எப்படி?

மிளகு வடை மிளகு, உளுந்து ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்த வடை பெருமாள் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மிளகு வடை உடலுக்கு மிகவும் நல்லது.

மிளகு வடைகளையே கோர்த்து வடை மாலையாக, ஆஞ்சநேயருக்கு சாற்றுகின்றனர்.

இந்த வடையை தயார் செய்து, இரண்டு நாட்கள் வரை வைத்திருந்து உண்ணலாம் என்பது கூடுதலான செய்தி.

உளுந்து வடைக்கு சேர்க்கும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவை இதில் சேர்க்கப்படுவதில்லை.

இனி சுவையான மிளகு வடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

உளுந்தம் பருப்பு – 200 கிராம்

அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயப் பொடி – சிறிதளவு

நல்ல எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

 

மிளகு வடை செய்முறை

உளுந்தம் பருப்பை முதலில் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

 

உளுந்தம் பருப்பு ஊறும் போது
உளுந்தம் பருப்பு ஊறும் போது

 

பின்னர் வடிகட்டில் உளுந்தம் பருப்பைச் சேர்த்து, தண்ணீர் முழுவதையும் ஒட்ட வடிகட்டவும்.

 

உளுந்தம் பருப்பை வடிகட்டும் போது
உளுந்தம் பருப்பை வடிகட்டும் போது

 

உளுந்தம் பருப்புடன் தேவையான உப்பினைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்கமால் கொர கொரவென அரைத்துக் கொள்ளவும். அதாவது உளுந்தம் பருப்பினை 70 சதவீதம் அரைத்தால் போதுமானது.

 

உளுந்த பருப்பினை அரைக்கும் முன்பு
உளுந்த பருப்பினை அரைக்கும் முன்பு

 

 

கொர கொரவென அரைக்கப்பட்ட உளுந்த பருப்பு
கொர கொரவென அரைக்கப்பட்ட உளுந்த பருப்பு

 

மிளகு, சீரகத்தை தனித்தனியாக தண்ணீர் சேர்க்காமல், கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

 

அரைக்கப்பட்ட மிளகு
அரைக்கப்பட்ட மிளகு

 

 

அரைக்கப்பட்ட சீரகம்
அரைக்கப்பட்ட சீரகம்

 

ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்த மாவு, பொடித்த மிளகுப் பொடி, சீரகப் பொடி, அசிரி மாவு, பெருங்காயப் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு சேர பிசையவும்.

 

உளுந்த மாவுடன் பொடி வகைகளைச் சேர்த்ததும்
உளுந்த மாவுடன் பொடி வகைகளைச் சேர்த்ததும்

 

1 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெயை பிசைந்த உளுந்து கலவையில் சேர்த்து, நன்கு ஒருசேர பிசைந்து கொள்ளவும்.

 

உளுந்து கலவையில் எண்ணெயைச் சேர்த்ததும்
உளுந்து கலவையில் எண்ணெயைச் சேர்த்ததும்

 

 

திரட்டப்பட்ட உளுந்தமாவு
திரட்டப்பட்ட உளுந்தமாவு

 

உளுந்த மாவுக் கலவையிலிருந்து சிறிய எலுமிச்சையளவு மாவினை எடுத்து, உருண்டையாக உருட்டவும். இவ்வாறு எல்லா மாவினையும் சிறுஉருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

 

சிறுஉருண்டைகளாகத் திரட்டியதும்
சிறுஉருண்டைகளாகத் திரட்டியதும்

 

வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றிக் காய விடவும்.

சதுர வடிவ வாழையிலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.

 

எண்ணெய் தடவி உருண்டையை வைத்ததும்
எண்ணெய் தடவி உருண்டையை வைத்ததும்

 

அதில் உருட்டிய சிறிய உருண்டையை வைத்து வடையாகத் தட்டவும்.

 

வடையாக விரிக்கும் போது
வடையாக விரிக்கும் போது

 

வடையாக விரித்ததும் நடுவில் சிறுதுளையை இடவும்.

 

எண்ணெயில் போட தயார் நிலையில்
எண்ணெயில் போட தயார் நிலையில்

 

வடையாக விரித்த மாவினை காய்ந்த எண்ணெயில் போடவும்.

 

எண்ணெயில் வேகும் போது
எண்ணெயில் வேகும் போது

 

வடையானது நிறம் மாற ஆரம்பித்ததும், அடுப்பினை குறைத்து சிம்மிற்கும் சற்று கூடுதலாக வைக்கவும்.

பொன்னிறமாக இருபுறமும் வெந்ததும் வடையை வெளியே எடுக்கவும்.

 

எடுக்கத் தயார் நிலையில் வடை
எடுக்கத் தயார் நிலையில் வடை

 

இவ்வாறு எல்லா மாவினையும் வடைகளாகச் சுட்டு எடுக்கவும்.

சுவையான மிளகுவடை தயார்.

 

சுவையான மிளகு வடை
சுவையான மிளகு வடை

 

இந்த வடை பிய்க்கும் போது தட்டை போல் உடையும்.

இதனை பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லோரும் விரும்பி உண்பர்.

குறிப்பு

உளுந்தம் மாவினை அரைக்கும் போது, கொஞ்சம் முழு உளுந்தம் பருப்பும் கலவையில் இருக்குமாறு அரைத்துக் கொள்ளவும்.

சிறிய உருண்டையை வடையாக விரிக்கும் போது, எல்லா இடங்களிலும் மாவானது ஒரே தடிமனில் இருக்குமாறு தட்டவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.