பார்த்த ஒருவனே
கேட்க முடிந்ததையும்
உணர்ந்தவன் ஆகிறான்
யாரும் பார்க்காத போது
அவன் நீருக்குள்
முழுகுவதைப் போல்
நுழைந்தவன் பார்த்த உலகம்
அவனுக்குத் தரும் அர்த்தம்
முதன் முறையாக
அவனுக்குள் இறங்குகிறது
அவன் குரலில்
இருந்த தொனி
பண்பட்டதாக இருந்தது
இதுவரை அவன்
பெற்ற அனைத்தும்
ஒரே இடத்திலிருந்து வந்தது
அவனை இட்டுச் செல்லும்
வழிப்போக்கன் யார்
என் கவனத்தில்
அவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்
அவனிடத்தில் இன்னும்
நான் பேசி தீர்க்கவில்லை
அவனை நான்
தட்டி எழுப்புகிறேன்
அவனிடம் நான் போராடுகிறேன்
இந்த போராட்டத்தின்
காட்சிகளுக்குப் பதிலாக
வார்த்தைகள் வந்து விழுந்தன
புஷ்பால ஜெயக்குமார்