வேற்றுலக நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 30

வேற்றுலக நீர்

இரவு பத்து மணி இருக்கும்.

பெருமளவில் செயற்கை மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த நிலையில், முழுநிலவின் ஒளி எங்கும் பரவியிருந்தது.

மேகக் கூட்டங்கள் இல்லை. இயந்திர சத்தம் எதுவும் இல்லை. பறந்து கொண்டிருந்த பறவைகளின் ஒலியினை அவ்வப்பொழுது கேட்க முடிந்தது.

இரவு வானத்தைக் கண்டு மகிழ்ந்தவாறே, மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தேன். சட்டென எனது கவனம் அந்த மண் சட்டியில் சென்றது.

ஆம். கோடை காலங்களில் பறவைகளுக்காக அகண்ட மண்சட்டியில் நீரும், அதன் அருகில் தானியங்களும் வைப்பது வழக்கம்.

Continue reading “வேற்றுலக நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 30”

நீர் வாழிடம் – நீருடன் ஓர் உரையாடல் – 29

கடந்த இரண்டு நாட்களாகவே, அவ்வப்பொழுது பெருமழை கொட்டிக் கொண்டிருந்தது.

அன்று மழை சற்றே ஓய்ந்த நிலையில் நான் வெளியே வந்தேன்; வானத்தைப் பார்த்தேன். கார்மேகக் கூட்டங்கள் இன்னமும் அகலவில்லை. தெருவீதியை பார்த்தேன்; மழைநீர் தேங்கியிருந்தது.

வீட்டின் மதில் சுவரில் பல நத்தைகள் ஏறி ஒட்டிக் கொண்டிருந்தன. உடனே தேங்கிக் கொண்டிருந்த, மழை நீரை பார்த்தேன்.

Continue reading “நீர் வாழிடம் – நீருடன் ஓர் உரையாடல் – 29”

குளிர்விப்பான் – நீருடன் ஓர் உரையாடல் 28

குளிர்விப்பான்

சாதமும் சாம்பாரும் சமைத்துவிட்டேன். கூட, ‘முட்டை வறுவல்’ செய்யலாம் என்று தோன்றியது.

உடனே இரண்டு முட்டைகளை எடுத்து கடாயில் இட்டு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தினேன்.

சில நிமிடங்களில் முட்டை ஓட்டில் விரிசல்களை காண முடிந்தது. முட்டைகள் வெந்து விட்டன.

அடுப்பை அணைத்துவிட்டு, கடாயில் இருந்த அவிந்த முட்டைகளை எடுக்க முயன்றேன். அதிக வெப்பத்தை உணர்ந்தேன்.

Continue reading “குளிர்விப்பான் – நீருடன் ஓர் உரையாடல் 28”

நீர் சுழற்சி – நீருடன் ஓர் உரையாடல் – 27

நீர் சுழற்சி

“டிக்.. டிக்.. டிக்..” என சுவர் கடிகாரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஒலியை கவனித்தேன்.

கடிகாரத்தைப் பார்த்தேன். நேரத்தை சரியாக காண முடியவில்லை. காரணம் வெளிச்சம் இல்லை.

மின்விளக்கிற்கான பொத்தானை அழுத்தினேன். மின்விளக்கு பளிச்சிட்டது. கடிகாரத்தில், நேரம் 3.20 எனக் காட்டியது.

இது பிற்பகல் நேரம். உடனே, சன்னல் கதவுகளை திறந்து பார்த்தேன். இருட்டாக இருந்தது. சன்னல் வழியே வானத்தை பார்த்தேன்.

கார்மேகம் சூழ்ந்திருந்து. குளிர்ச்சியும் இருட்டும் சேர்ந்திருந்த அந்த பிற்பகல் வேளை எனக்கு மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும்.

Continue reading “நீர் சுழற்சி – நீருடன் ஓர் உரையாடல் – 27”

நீரின் நிறம் – ‍நீருடன் ஓர் உரையாடல் 26

நீரின் நிறம்

மாடியில் இருக்கும் நீர்த் தொட்டியை சுத்தம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். குளியலறையில் இருக்கும் குழாயை திறக்க, கருமை நிறத்தில் நீர் பீறிட்டு வந்தது.

நீர்த் தொட்டியில் இருந்த மாசுக்கள் எல்லாம் குழாய் வழியாக வெளியேறும்படி குழாயை திறந்தே வைத்தேன்.

சில நிமிடங்களுக்கு பிறகு குழாயின் வழியே ஊற்றிய நீரின் கருமைத் தன்மை குறைந்து கொண்டே வந்தது. அதன் பின்னர், நீர் சுத்தமாக இருந்தது.

நீரில் மாசுத் துகள்கள் இல்லாததை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.

Continue reading “நீரின் நிறம் – ‍நீருடன் ஓர் உரையாடல் 26”