கடல் நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 16

கடல் நீர்

பல ஆண்டுகளுக்கு பிறகு, இன்று தான் கடற்கரைக்கு வந்தேன். மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு கடலின் அழகை இரசித்துக் கொண்டிருந்தேன்.

கடற்காற்று ஓயாது வீசிக் கொண்டிருந்ததால், மதிய வெயிலின் தாக்கத்தைச் சற்றும் உணரவில்லை.

தூரத்தில் கடலில் தோன்றிய சிறிய அலை கடற்கரையை நெருங்க நெருங்க பெரிதானது. மாற்றாக, ஆர்ப்பரித்து வந்த பெரிய அலை, கடற்கரையை தொடும் பொழுது சிறிதானது.

அடுத்தடுத்து வந்த அலைகளின் ஓயாத விளையாட்டைக் கண்டு வியந்தேன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, எழுந்து சற்று முன்னோக்கி நடந்து சென்று கரை ஒட்டில் நின்றேன். அலைகள் வந்து எனது கால்களை நனைத்தன. அப்படியே சில நிமிடங்கள் கடந்தன.

“சந்தோஷமா…?” என்ற குரல் கேட்டது.

“யாரு….?” என்று எண்ணிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தேன்.

Continue reading “கடல் நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 16”

மென்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 15

மென்னீர்

வீட்டில் ஒவ்வொரு பகுதியாக சுத்தம் செய்துகொண்டு வந்தேன். அப்பொழுது எனது அறையின் பரணைச் சுத்தம் செய்ய முடுவு செய்தேன்.

ஒரு உயர்ந்த நாற்காலியின் மீது ஏறி நின்றுப் பார்த்தேன்.

பரணையில் அட்டைப் பெட்டிகள், சாக்கு மூட்டைகள் என பலப் பொருட்கள் இருந்தன. பயங்கர ஒட்டடை. தூசிப் படலம் அடர்த்தியாக இருந்தது.

“இதுல வேல செஞ்சா உடனே அலர்ஜி வந்திடும்” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

Continue reading “மென்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 15”

கனிம நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 14

கனிம நீர்

வந்த வேலை முடிந்தது. அந்த அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பேருந்து நிறுத்துமிடம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

அப்பொழுது மணி மதியம் 12-யை கடந்திருந்தது. வெயிலின் தாக்கமோ அதிகரித்திருந்தது.

வியர்வை ஊற்றெடுத்து எனது முகத்தை நனைத்தது. கைகுட்டையால் கழுத்திலும் முகத்திலும் சொட்டிக் கொண்டிருந்த வியர்வை துளிகளை நன்றாக துடைத்தேன். கைகுட்டை ஈரமானது.

Continue reading “கனிம நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 14”

வாலைவடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 13

வாலைவடி நீர்

வாலைவடி நீர் பயன்படுத்தினா தான் அந்த வேதிவினை சரியா நிகழும்” என்று கூறினேன்.

“சரிடா, நான் அந்த வேதிவினையை செஞ்சி பாத்துட்டு உனக்கு சொல்றேன்” என்று கூறிவிட்டு அலைபேசியை வைத்தான் நண்பன்.

ஆம், எனது நண்பனுடன் இரும்பு ஆக்சைடு நானோ துகள்களை தயாரிப்பதற்கான வழிமுறைக் குறித்து தான் நான் பேசிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது தண்ணி லாரி வரும் சத்தம் கேட்டது.

Continue reading “வாலைவடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 13”

மின்னாற்பகுப்பு நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 12

மின்னாற்பகுப்பு நீர்

மின்னாற்பகுப்பு நீர் (Electrolysed water) மற்றும் அதன் பயன்கள் பற்றி சற்று முன்னர் தான் எதேச்சையாக படித்து அறிந்து கொண்டேன்.

ஆச்சரியப்பட்டேன்.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிலிருந்தே ஜப்பானிய மருத்துவ நிறுவனங்களிலும், பின்னர், உலக நாடுகளிலும் பல்வேறு தொழிற்துறைகளில் மின்னாற்பகுப்பு நீர் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இப்பொழுதுதான் எனக்கு தெரியும்.

இந்த செய்தியை உடனே ’நீருக்கு’ தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது.

’என்ன செய்வது’ என்று தெரியவில்லை. இதுவரையிலும் நீர் தான் தானாக என்னிடம் வந்து பேசியது.

Continue reading “மின்னாற்பகுப்பு நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 12”