நன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11

நன்னீர்

ஒரு சிறிய வாளியில் நீர் நிரப்பிக் கொண்டு, கூடவே, ஒரு தட்டில் ஒரு பிடி அரிசியும், ஒரு இட்லியும் எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றேன்.

மே மாதம், அதுவும் மதியப் பொழுது என்பதால், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

வாளியில் இருந்த நீரை மாடியில் வைத்திருந்த ஒரு அகண்ட வாயுடைய மட்பாண்டத்தில் வழிய வழிய ஊற்றினேன்.

Continue reading “நன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11”

நீருடன் ஓர் உரையாடல் 10 – வெந்நீர்

வெந்நீர்

பகல் ஒரு மணி இருக்கும். அது கத்திரி வெயில் காலம் வேறு.

மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. அப்பொழுது நிலவிய வெப்பத்தை தாங்க முடியவில்லை. எனது தலையிலிருந்து காதின் ஓரமாக வியர்வை வழிந்து கொண்டிருந்தது.

வியர்வையை கையால் துடைத்துக் கொண்டு எனது கழுத்தையும் துடைத்தேன். வியர்வை காய்ந்து, உப்பு படர்ந்திருந்தது.

எழுந்து வீட்டின் பின்புறம் சென்றேன். அங்கிருந்த குழாயை திறந்து இரண்டு கரங்களையும் நீட்டினேன். குழாயிலிருந்து ஊற்றிய நீரை பிடித்தேன்.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 10 – வெந்நீர்”

நீருடன் ஓர் உரையாடல் 9 – உவர் நீர்

உவர் நீர்

நாளை திங்கட்கிழமை.

‘நீர் தொழில்நுட்பவியல்’ குறித்து பாடம் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கான முன் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

குறிப்பாக, நீரில் இருந்து உப்புக்களை பிரித்தெடுக்கும் முறைகள் பற்றிய தகவல்களை வாசித்துக் கொண்டிருந்தேன்.

“வேலையா இருக்கியா? தண்ணி லாரி வந்திருக்கு. இரண்டு குடம் மட்டும் புடிச்சிட்டு வர்றீயா?” என்று அம்மா கேட்டார்.

“தோ, வர்றேன் மா” என்று கூறி விரைந்து சென்றேன்.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 9 – உவர் நீர்”

நீருடன் ஓர் உரையாடல் 8 – கடின நீர்

கடின நீர்

அம்மா சொன்ன மளிகைப் பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

கதவை திறந்து உள்ளே நுழைந்தேன். கையிலிருந்த மளிகைப் பொருட்களை நிர‌ம்பிய பையை வாசற்படியருகே வைத்துவிட்டு, இடது புறம் இருந்த குழாய் அருகில் சென்றேன்.

கைகளை சோப்பு போட்டு நன்றாக சில நிமிடங்கள் தேய்த்துக் கொண்டு பின்னர் குழாய் நீரில் கழுவினேன்.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 8 – கடின நீர்”

நீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்

படிக நீர்

மதிய நேரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ‘மோர் குடித்தால் இதமாக இருக்கும்’ என்று மனதில் தோன்றியது.

சமையலறைக்குச் சென்றேன்.

சமையலறை மேடையிலிருந்த ஒரு கிண்ணத்தில் தயிர் இருந்தது. ‘மோர் குடிக்க வேண்டும்’ என்ற எண்ணம் இன்னும் மேலெழுந்தது.

உடனே, கலவைக்கருவி (மிக்சி) ஜாடியை எடுத்து அதில் தயிரை இட்டு, அத்தோடு சிறிதளவு நீரை சேர்த்து கலவைக்கருவியில் வைத்து இயக்கினேன். சில நொடிகளில் மோர் தயார் ஆனது.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்”