நீருடன் ஓர் உரையாடல் 6 – நீரின் உறைதிறன்

நீரின் உறைதிறன்

ஒரு ஆய்வகத்தினுள் நுழைந்து சென்று கொண்டிருந்தேன். இறுதியில் ஒரு விஸ்தாரமான ஆய்வக அறை இருந்தது. அங்கிருந்த ஒரு ஆராய்ச்சியாளர் என்னை இன்முகத்துடன் வரவேற்றார்.

நானும் இன்முகத்துடன் அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். அதனை அடுத்து ஒரு மேசையில் இருந்த கருவியை அவர் எனக்கு காண்பித்தார். ஆர்வமுடன் அதனை நான் பார்த்தேன். அந்தக் கருவி ஏதோ ஒரு பெட்டி மாதிரித்தான் இருந்தது.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 6 – நீரின் உறைதிறன்”

நீருடன் ஓர் உரையாடல் 5 – கொதிநீராவி

கொதிநீராவி

அன்று நான் மட்டும் தான் வீட்டில் இருந்தேன். ‘காலை சிற்றுண்டியாக என்ன சமைக்கலாம்?’ என்ற கேள்வி மனதில் எழுந்தது.

நேற்று, அம்மாவும் அப்பாவும், அக்கா வீட்டிற்கு புறப்படும் முன், “பிரிட்ஜில இட்லி மாவு இருக்கு, காலைல தோசை ஊத்திக்கோ” என்று அம்மா கூறியது நினைவிற்கு வந்தது.

உடனே குளிர்சாதன பெட்டியை திறந்தேன். காய்கறிகளும், மூன்று பாத்திரங்களும் மூடிய நிலையில் இருந்தன. முன்னதாக தெரிந்த ஒரு குண்டாவை திறந்து பார்த்தேன். அதில் மாவு இருந்தது. அதை வெளியே எடுத்து வைத்தேன்.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 5 – கொதிநீராவி”

நீருடன் ஓர் உரையாடல் 4 – ஈரப்பதம்

நீருடன் ஓர் உரையாடல் 4 - ஈரப்பதம்

காலை நான்கு மணி இருக்கும். விழித்துக் கொண்டேன். எழுந்து சென்று நீரால் முகத்தைக் கழுவினேன். நீர் சில்லிட்டது. எனது தூக்கம் முற்றிலும் நீங்கியது.

சில நொடிகள் வீட்டிற்குள் நடந்தேன். பின்னர் வாசற்கதவை திறந்து வெளியே வந்தேன். வெளிச்சம் இல்லை. செயற்கை ஒலிகளும் கேட்கவில்லை.

இரவின் அமைதி எங்கும் ஆட்கொண்டிருந்தது. எனினும் பலவித பறவைகளின் ஒலிகளை அவ்வப்பொழுது கேட்க முடிந்தது. பறவைகளின் ஒலிகள் என்னை கவர்ந்தன‌.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 4 – ஈரப்பதம்”

நீருடன் ஓர் உரையாடல் 3 – பனிக்கட்டி

நீருடன் ஓர் உரையாடல் 3 - பனிக்கட்டி

பூமியின் துருவப் பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் விளைவுகளை, ஓர் அறிவியல் இணைய இதழில் வாசித்துக் கொண்டிருந்தேன்.

அதில் வெண்ணிறப் பனிப்பாறைகள் நீரில் மிதக்கும் படியான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அப்பொழுது அதிலிருக்கும் இயற்கை அறிவியல் என் சிந்தனையை தூண்டியது.

பனிப்பாறைகளும் நீர் மூலக்கூறுகளால் தான் ஆக்கப்படிருக்கின்றன. ஆனால் அவை திடநிலையில் இருக்கின்றன. இதற்கு காரணம், வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியசை அடைய, திரவ நீர் திடநிலைக்குச் செல்கிறது.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 3 – பனிக்கட்டி”

நீருடன் ஓர் உரையாடல் 2- நீரோட்டம்

நீரோட்டம்

“மோட்டார் ஆன் பண்ணிருக்கேன், அரைமணி நேரம் கழிச்சு நிறுத்திடுப்பா” என்று அப்பா சொல்லிச் சென்றது, அப்பொழுது தான் எனது நினைவிற்கு வந்தது.

உடனே, மேல்மாடிக்கு விரைந்து சென்றேன். எதிர்பார்த்தபடியே, நீர்த்தொட்டி நிறைந்து, அதிகப்படியான நீரை குழாயின் மூலம் ஊற்றிக் கொண்டிருந்தது. மாடி தள‌த்திலும் நீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

“ச்சே, இவ்வளவு தண்ணி வீணா போச்சே” என்று வருந்தினேன். மேலும் நீர் வீணாகாமல் தடுக்க, கீழே சென்று ஒரு வாளியை எடுத்து வந்து, தொட்டியிலிருந்து வெளியேரும் நீரை சேகரிப்பதற்கு வைத்தேன்.

தொட்டியின் மேற்பகுதியில் இருந்த குழாயிலிருந்து நீர் வெளியேறி கீழே இருந்த வாளியில் இரைச்சலுடன் விழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வாளியில் நீரின் அளவு உயர்ந்து கொண்டு வந்தது.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 2- நீரோட்டம்”