உருகிய நீர் – நீருடன் ஓர் உரையாடல் 34

உருகிய நீர்

குளிர்சாதனப் பெட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தேன்.

இன்றைக்கு தான் நேரம் கிடைத்தது. இந்த வேலையை அப்பொழுது தொடங்கினேன்.

முதலில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்த எல்லாப் பொருட்களையும் வெளியே எடுத்து வைத்தேன்.

அப்பொழுது தான் தோன்றியது, ஐஸ்பெட்டியைத் திறக்க வேண்டும் என்று. உடனே முயன்றேன்; முடியவில்லை.

அந்த பெட்டி முழுவதும் பனிக்கட்டிகள் உருவாகி இருந்ததால், பெட்டியின் கதவை திறக்க முடியாமல் போயிற்று.

Continue reading “உருகிய நீர் – நீருடன் ஓர் உரையாடல் 34”

கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆயிடுச்சா?

ஒவ்வொரு கல்வியாண்டிலும் புதிது புதிதாய் மாணவர்களை சந்திக்கும் பாக்கியம் என் போன்ற ஆசிரியர்களுக்கு கிடைக்கும் இனிய அனுபவமாகும்.

புதிய மாணவர்களுக்கு முதல் நாள் வகுப்பு எடுக்கச் செல்லும் போது, பரஸ்பர அறிமுகங்கள் மற்றும் நல விசாரிப்புகளுக்குப் பின் நான் எனது வகுப்பினை ஒரு கேள்வியுடன் ஆரம்பிப்பது வழக்கம்.

நான் ஒரு வேதியியல் பேராசிரியர். எனவே எனது முதல் கேள்வி என்னவென்றால் “What is Chemistry?” என்பதுதான்.

அதாவது கெமிஸ்ட்ரி என்றால் என்ன?

இதற்கு பல தரப்பட்ட பதில்களை நான் கிடைக்கப் பெற்றிருக்கின்றேன்.

Continue reading “கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆயிடுச்சா?”

நீரின் வயது – நீருடன் ஓர் உரையாடல் 33

கார்பன் அணுவின் ஐசோடோப்பான கார்பன்-14ஐ பயன்படுத்தி பழங்கால படிமங்களின் வயதினை கண்டறியும் கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பு முறை பற்றிய தகவல்களை வாசித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது எனக்கு தாகம் எடுத்தது. மேசையில் இருந்த நீர் பாட்டிலை எடுத்து, அதிலிருந்த நீரை குடித்தேன்.

மீண்டும் வசிப்பை கவனமுடன் தொடர்ந்தேன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு…

“எவ்வளவு நேரமா கூப்பிடறது சார்?” என்ற குரல் ஒலி கேட்டது.

Continue reading “நீரின் வயது – நீருடன் ஓர் உரையாடல் 33”

நீர் ஆக்கம் – நீருடன் ஓர் உரையாடல் – 32

நீர் ஆக்கம்

ஆய்வகத்தில் மும்முரமாக பணி செய்துக் கொண்டிருந்தேன். இரும்பு ஆக்சைடு நானோ துகள்களை தயாரிப்பது தான் அந்த பணி. இரும்பு ஆக்சைடு தயாரிப்புக்கு தேவையான அனைத்து வினைபடு பொருட்களையும் ஆய்வுக் குடுவையில் சேர்த்துவிட்டேன்.

இனி, நான்கு மணி நேரத்திற்கு பின்பு தான் வினையை முடித்து, அதிலிருந்து வினைவிளை பொருளை பிரித்தெடுக்க வேண்டும்.

அதற்கிடையில் வேதிவினையை நிகழ்த்தும் மேடையை சுத்தம் செய்துவிட்டு அருகில் இருந்த குழாயில் கைகளை சோப்பு போட்டு கழுவிக்கொண்டு, நாற்காலியில் அமர்ந்தேன்.

Continue reading “நீர் ஆக்கம் – நீருடன் ஓர் உரையாடல் – 32”

மறை நீர்- ‍நீருடன் ஓர் உரையாடல் – 31

மறை நீர்

நீண்ட காலத்திற்கு பின், நண்பன் அலைபேசியின் மூலம் என்னை அழைத்தான். நலம் விசாரிப்பு, தற்போதைய நிலை, பழைய நினைவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம்.

எங்களது உரையாடல் முடிந்தது. அலைபேசியை அணைத்து மேசையில் வைத்தேன்.

ஒருமுறை கிராமத்தில் இருந்த எனது நண்பனது வீட்டிற்கு சென்றதும், அங்கு இருந்த தோட்டம், சாகுபடி நிலங்களைக் கண்டு மகிழ்ந்ததும் என் கண் முன்னே வந்து சென்றது.

நீர்ப் பாசனம் மற்றும் நெல் வகைகள் பற்றிய தகவல்களை நண்பனின் அப்பா எனக்கு விரிவாக எடுத்துச் சொன்னதும் எனது நினைவிற்கு வந்தது.

Continue reading “மறை நீர்- ‍நீருடன் ஓர் உரையாடல் – 31”