திருவெம்பாவை என்னும் தமிழ் மந்திரம் கடல் கடந்து பாடப்படும் பெருமை மிக்கது. இது சைவத்தின் முழுமுதல் கடவுளான சிவபெருமானின் மீது பாடப்பட்ட இருபது பாடல்களின் தொகுப்பு ஆகும்.
திருவெம்பாவை என்பதில் திரு – தெய்வீகம்; எம் – உயிர்த்தன்மை; பாவை – வழிபாட்டிற்கான தெய்வம் எனப் பொருள் கொள்ளலாம்.
இதனுடைய திரண்ட பொருள், தெய்வீகமான திருவருள் எம் உயிர்த்தன்மையுடன் இணைந்து இயங்குகிறது என்பதாகும்.