குமரனின் ஆசையும் விளைவும் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

“குமரன் குமரன் எழுந்திருப்பா. இன்னிக்கி உன்னோட விடுதலை நாள். வா! உன்னைய ஜெயிலரையா கூப்பிடுறாரு” என்று ஒரு காவலாளி சொல்லி விட்டுப் போக, பரட்டை தலையும் முகத்தில் காடு போல் மண்டி இருந்த தாடியும் மீசையும் அவன் அழகை மறைத்திருந்தது.

36 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி கருத்த தேகத்துடன் காவலாளியை பின் தொடர்ந்தான். காலடி சத்தம் கேட்டதும் தன் இருக்கையில் அமர்ந்திருந்த ஜெயிலர் தலையை நிமிர்த்தினார்.

Continue reading “குமரனின் ஆசையும் விளைவும் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”

முற்பகல் செய்யின்? – எம்.மனோஜ் குமார்

‘ஓலா’ செயலி மூலம் ஆவடியிலிருந்து தாம்பரம் செல்ல, ஆட்டோ சவாரிக்கு ஏற்பாடு செய்தான் செல்வா. அவனது மனைவி மல்லிகாவோடு ஆட்டோவில் ஏறினான்.

Continue reading “முற்பகல் செய்யின்? – எம்.மனோஜ் குமார்”

எனையும் தீண்டுமோ தென்றல்? – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

குளித்துவிட்டு ஹாலுக்கு வந்து சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள் செல்வி. மணி எட்டு என்பதைக் காட்டியது கடிகாரம்.

“அட! மணி எட்டாயிட்டே சீக்கிரம் கெளம்பணும். கொஞ்சம் லேட்டானாலும் சிடுமூஞ்சி சூப்பர்வைசர் சிங்காரம் ‘காள்காள்’னு கத்தும்” என்று வாய்விட்டுப் புலம்பியவாறே தன்னை சுடிதாருக்குள் நுழைத்துக் கொண்டாள் செல்வி.

நீலநிற பாராசூட் பிளாஸ்டிக் குப்பியிலிருந்து தேங்காய் எண்ணையை இடது கையில் கொஞ்சமாய்ச் சாய்த்து விட்டு எண்ணைக் குப்பியை எடுத்த இடத்தில் வைத்து விட்டு இருகைகளாலும் எண்ணையைப் ‘பரபர’வென்று தேய்த்து தலையில் தடவிக் கொண்டாள்.

Continue reading “எனையும் தீண்டுமோ தென்றல்? – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”