பரிவு – எம்.மனோஜ் குமார்

பரிவு - கதை

தெருவில் தனிமையில் நடந்து கொண்டிருந்தான் குமார். அவன் வருகையை பார்த்ததும், தெரு நாய்கள் கோபத்தில் சத்தமிட்டு குரைத்தன.

Continue reading “பரிவு – எம்.மனோஜ் குமார்”

பாதை மாறிய பாதங்கள் – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

காலை மணி ஒன்பதரை.

ஹாலில் சுற்றும் சீலிங் ஃபேனின் சன்னமான ஒலியைத் தவிர‌ வேறு எந்த சப்தமுமின்றி வீடு ‘கல்’லென்று அமைதியாய் இருந்தது. ஆனால் ஆனந்தியின் மனதில் அமைதி இல்லை. அது பௌர்ணமி நாளின் கடலலைப் போல் பொங்குவதும் வடிவதுமாய் எண்ண அலைகளால் அலைக்கழிக்கபட்டு அமைதியின்றி தவித்தது.

செகன்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் ஆறுவயது மகன் அன்பரசு பள்ளிக்கும், அரசுப் பணியிலிருக்கும் கணவன் சுதாகர் அலுவலகமும் சென்றாகி விட்டது.

Continue reading “பாதை மாறிய பாதங்கள் – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

தனிக்குடித்தனம் – மஞ்சுளா ரமேஷ்

கைவிரல்கள் வேகமாக பூக்களைத் தொடுத்துக் கொண்டிருக்க, அதைவிட வேகமாக வார்த்தைகளை விடுத்துக் கொண்டிருந்தாள் வடிவு தன் கணவனிடம்.

“பொண்ணை பார்த்தோமா? பேசினோமோன்னு இல்லாம, தனியா மணிக்கணக்குல போய் பேசறதுக்கு என்னதான் இருக்குமோ தெரியல? இந்த மாதிரி அநியாயத்தை நான் பார்ததேயில்ல”

எதிரே ஊஞ்சலில் அமர்ந்திருந்த மயில்சாமி, மனைவியை கடிந்தார்.

Continue reading “தனிக்குடித்தனம் – மஞ்சுளா ரமேஷ்”

நினைவுகள் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

2ஏ பூந்தோட்டம் செல்லும் டவுன் பஸ் வந்து நின்றது.

பஸ்ஸின் பின்புறம் வழியாக மீன் கூடைகள் எல்லாம் இறக்கியபின் பூபதியும் கீழே இறங்க, பாபு தன் லோடு சைக்கிளை அருகே கொண்டு வந்தான்.

மீன் கூடையை ஏற்றி வைத்து சைக்கிளை பாபு தள்ள, பூபதி கூடையைப் பிடித்துக் கொண்டதும் இருவரும் நடந்தனர்.

கடைத்தெருவில் தூங்குமூஞ்சி மரத்தடி வந்ததும் பூபதி மீன் கூடையை இறக்கி வைத்த போது ஊரிலிருந்த பெரியவீட்டுப் பெண்கள் சுற்றி வளைத்தனர்.

பாபு சைக்கிளை ஸ்டாண்ட் செய்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

Continue reading “நினைவுகள் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”

பெண் ஒன்று கண்டேன் – ஜானகி எஸ்.ராஜ்

பிற்பகல் மூன்று மணி அளவில் செஷனுக்குள் நுழைந்த பிரபாகரிடம் சேகர் கேட்டான்.

“என்ன பிரபாகர், அரைநாள் லீவு எடுத்திட்டு இவ்வளவு லேட்டாய் ஆபிசுக்கு வர்றே?”

Continue reading “பெண் ஒன்று கண்டேன் – ஜானகி எஸ்.ராஜ்”