க(ச)லப்புத் திருமணம் – கதை

முற்போக்குச் சிந்தனையாளரான நல்லசிவத்தைத் தேடி அன்று காலை இருவர் வந்து, அவர் மகள் திருமண விஷயமாக ஓர் வரன் குறித்துப் பேச முற்பட்டபோது கறாராகச் சொல்லிவிட்டார்.

Continue reading “க(ச)லப்புத் திருமணம் – கதை”

ஒரு பெண் நினைத்தால் – கதை

அன்றைய காரைக்கால் மிகவும் அமைதியாக இருக்கும்.

காத்தா பிள்ளை கோடியில் உள்ள முத்துப் பிள்ளை ரொட்டி கடையில் பக்கோடா என்றால் பேமஸ்.

அப்போதெல்லாம் பக்கோடாவை பேப்பர் சுத்தி பொட்டலமாக கொடுப்பார்கள். ஒரு பொட்டலம் 75 காசு.

ஒரு மாம்பழ வியாபாரி தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு 5 பொட்டலங்களை வாங்கி தன் பழ கூடையில் வைத்துவிட்டு சைக்கிளை தள்ளி கொண்டு நடந்தார்.

சிறிது தூரத்தில் பேருந்து நிலையத்தை ஒட்டியவாறு டைமண்ட் தியேட்டர் வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு எதிரே உள்ள கடைக்குள் சென்று பழ வியாபாரி திரும்பி வெளியே வந்தார்.

நீண்ட நாள் பழகிய நண்பர் கண்ணில் பட்டார்.

“அடடே வாங்க பாய், எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆகுது ஆளையே காணோம்.”

Continue reading “ஒரு பெண் நினைத்தால் – கதை”

ஈடுபாடு – கதை

நவக்கிரகத்தை வலம் வந்த சமயம் கோயிலை ஒட்டிய புல்தரையில் அமர்ந்து அந்த இரு பெண்மணிகளும் உரையாடிக் கொண்டிருந்தனர். இருவருமே சம வயதுக்காரர்கள்; ஐம்பதைத் தாண்டியவர்கள்.

Continue reading “ஈடுபாடு – கதை”

விளக்கு எதற்கு? – கதை

ஒருநாள் இரவு இராமுவும் சோமுவும் வெளியூரிலிருந்து தங்கள் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தொலைவில் ‘மினுக் மினுக்’ என்று வெளிச்சம் ஒன்று தெரிந்தது. இவர்களும் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தனர்.

அப்போது அவர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர்.

“இவ்வளவு சின்ன வெளிச்சமாகத் தெரிகிறதே, சைக்கிள் தான் அது” என்றான் இராமு.

Continue reading “விளக்கு எதற்கு? – கதை”

நினைவுகள்… நிஜங்கள்…. கற்பனைகள்….. – கதை

சுதாகருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அலுவலகத்தில் அவரவர் மிகத்தீவிரமாகத் தங்கள் வேலையில் மூழ்கியிருக்க, இவன் மட்டும் எதுவுமே செய்யத் தோன்றாதவனாக மேஜை டிராயரை இழுப்பதும், மூடுவதும், போனை நோண்டுவதும், டேபிள் வெயிட்டை உருட்டுவதுமாய், ஃபைல்களைத் திறந்து மூடி இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தான்.

சுதாகருக்கு நேர் எதிர் இருக்கைக் காலியாக இருந்தது. அதில் மோகனா அமர்ந்திருப்பதாகவே தோன்றியது அவனுக்கு. அவளது உருவத்தை மனதிலிருந்து அகற்ற முடியவில்லை.

Continue reading “நினைவுகள்… நிஜங்கள்…. கற்பனைகள்….. – கதை”