காசேதான் கடவுளடா – சிறுகதை

பணம் முக்கியமா?

சித்திரை வெயிலின் கடுமை 10 மணிக்கு எல்லாம் தெரிய ஆரம்பித்து விட்டது. தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான் முரளி.

அடுப்பில் என்னை காய்ந்து கொண்டிருந்தது. பூரிக்கு மாவை வளர்த்துக் கொண்டு இருந்தான். அவன் மாஸ்டராக பணியாற்றுகிறான்.

அடுப்பு ஒரு பக்கத்தில் பூரி வேக வைப்பது போல் அவனை வேக வைத்துக் கொண்டிருக்க, மற்றொருபுறம் வெயிலின் தாக்கம் அவனை வேர்த்து விடச் செய்தது.

Continue reading “காசேதான் கடவுளடா – சிறுகதை”

தம்பி உடையாள் – சிறுகதை

தம்பி உடையாள் - சிறுகதை

கூட்டமில்லா பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தாள் சந்தியா. சீறி அடிக்கும் காற்றை ரசித்தவாறு இருக்கையில் சாய்ந்தபடி இருந்தாள்.

அன்று காலை அலுவலகத்தில் மீனா பேசியது, மனதில் ஒலித்தது.

“எவ்வளவு நாள் இப்படியே இருக்கப்போற சந்தியா? உன் தம்பியும் நல்ல வேலையில் சேர்ந்துட்டான். தங்கை மேகாவும் டிகிரி முடிச்சிட்டா. அப்புறம் என்ன?”

Continue reading “தம்பி உடையாள் – சிறுகதை”

அழகிய மோகினி – சிறுகதை

இரவு 12 மணி.

சன்னாநல்லூரில் இருந்து நாகப்பட்டினத்திற்கு சுந்தரராமன் பஸ் வந்து கொண்டிருந்தது.

அதுதான் அந்த ஊருக்கு கடைசி பஸ் என்பதால் அவ்வளவாக கூட்டம் கிடையாது. விரலை விட்டு எண்ணினால் ஒரு பத்து பேர் தான் இருப்பார்கள். பஸ் திருமருகலை தாண்டி வந்து கொண்டிருந்தது.

அடுத்த ஸ்டாப் சீயாத்தமங்கை நெருங்குவதை உணர்ந்த குமரன் தன் ஹேண்ட் பேக்கையும் சூட்கேசையும் எடுத்துக் கொண்டு வண்டி நின்றதும் இறங்கி வேக வேகமாக நடந்தான்.

Continue reading “அழகிய மோகினி – சிறுகதை”

வழித்துணை – சிறுகதை

வழித்துணை சிறுகதை

மாறன் காதலைச் சொல்லி விட்டான்.

கவிதாவுக்கும் அவன்மீது கொஞ்சம் ஈர்ப்பு இருந்தது. இப்போது காதலை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டாள். ஆனாலும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள்.

இதைத் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான், கவிதாவை ஒருதலையாகக் காதலிக்கும் கார்த்திக்.

Continue reading “வழித்துணை – சிறுகதை”

முடிவல்ல ஆரம்பம் – சிறுகதை

முடிவல்ல ஆரம்பம் - சிறுகதை

கவிதா வெகுவாய் தளர்ந்திருந்தாள். சற்றுமுன் வந்த ஃபோன்கால் அவளை அமைதி இழக்கச் செய்தது.

பவித்ரனின் அலுவலக ஃபோன்தான் அது. மீண்டும் அவளது காதில் ஒலித்தது.

“இங்க பாருங்கம்மா, உங்க கணவருடைய நடவடிக்கை ஏதும் சரியில்ல. இதே தனியார் அலுவலகம்னா வேலையைவிட்டு விரட்டியடிச்சிருப்பாங்க. அரசு வேலைன்றதனால பாவபுண்ணியம் பாக்குறோம். இதான் கடைசி. சொல்லி வைங்க.”

“சரி” என்று சொல்லக்கூட திராணியற்று ஃபோனைத் துண்டித்து வைத்தாள்.

Continue reading “முடிவல்ல ஆரம்பம் – சிறுகதை”