சென்டிரல் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டதுமே தீர்மானித்துக் கொண்டான் விஜய்.
‘இன்று எப்படியாவது இந்த ஐம்பது ரூபா நோட்டைத் தள்ளி விடணும்.’
பாக்கெட்டிலிருந்து வெகு ஜாக்கிரதையாக எடுத்துப் பிரித்துப் பார்த்தான்.
வயிறு எரிந்தது.
‘பாவிப் பயல், எவனோ ஒருத்தன் எங்கிட்டத் தள்ளி விட்டானே இதப் போயி!’
அந்த ஐம்பது ரூபாய் நோட்டைப் பார்க்க பார்க்க முகம் ‘ஜிவ்’வெனச் சிவந்தது.
Continue reading “ஐம்பது ரூபா நோட்டு – சிறுகதை”