விளிம்பில் நிகழும் அற்புதங்கள் – சிறுகதை

விளிம்பில் நிகழும் அற்புதங்கள்

சுஜித்துக்கு இந்த உணவு டெலிவரி செய்யும் வேலை சுத்தமாக பிடிக்கவில்லை. அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் எம் பி ஏ படித்து முடித்திருப்பான்.

எவ்வளவு வைத்தியம் பார்த்தும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. எம் பி ஏ இரண்டாவது செமெஸ்டரிலேயே அப்பா இறந்துவிட்டார். அப்பாவுடன் ஆஸ்ப்பிட்டலில் இருந்ததால் ஒரு சில பேப்பரை தவிர எல்லாமுமே அரியர்.

நீச்சல் தெரியாதவனை நடுக்கடலில் தூக்கி போட்டது போல், காலம் சுஜித்தை தூக்கி எறிந்து விட்டது. உடனடியாக இந்த வேலைதான் கிடைத்தது.

அப்பாவின் டூ வீலரை ஆசைக்கு கூட ஓட்டிப் பார்க்கத் தரமாட்டார். இப்போது மொத்த வாழ்க்கையும் இந்த டூ வீலரில் கழிகிறது.

Continue reading “விளிம்பில் நிகழும் அற்புதங்கள் – சிறுகதை”

அட்மிஷன் – சிறுகதை

அட்மிஷன்

அட்மிஷன் போடுவதற்கு, ஃபைலில் மலை போல் குவிந்து கிடந்த விண்ணப்ப படிவங்களைப் பரிசீலனை செய்யத் தயாரானார் வெங்கடேஸ்வரன்.

அவரது பெயருக்குக் கீழே ‘ஹெட்மாஸ்டர்’ என்று பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை ஒன்று டேபிளில் அவர் முன் காட்சியளித்தது.

ஏதோ கேட்பதற்காகக் காலிங் பெல்லை அழுத்தி பியூனை அழைத்தபோது டேபிளை அலங்கரித்த போன் இவரை அழைத்தது.

ரிசீவரை எடுத்துக் காதில் வைத்த போது எதிர்முனையில் “இஸ் மிஸ்டர் வெங்கடேஸ்வரன் அவைலபிள்?” என்றதோர் குரல் கேட்டது.

Continue reading “அட்மிஷன் – சிறுகதை”

தாய்மை – சிறுகதை

தாய்மை

“என்ன நித்யா முகம் வாடியிருக்கு?”. நளினி இப்படிக் கேட்டதும் அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் யாவும் கண்களில் கண்ணீராய் முட்டிக் கொண்டு நிற்க, நித்யாவின் பார்வை மங்கலாயிற்று.

நளினியால் ஓரளவு ஊகிக்க முடிந்தது. வனிதா வார்த்தை அம்புகளை எய்திருப்பாள். முழு விவரமறிய மீண்டும் கேட்டாள்.

“வனிதா ஏதாவது சொன்னாளா?”

“அவ கிடக்கிறா. மனதைப் போட்டுக் குழப்பிக்காதே.”

Continue reading “தாய்மை – சிறுகதை”

இனிக்கும் புளியம்பழம் – சிறுகதை

இனிக்கும் புளியம்பழம்

 நான் கல்லூரி முடித்து வீடு செல்லும் வழியில், என் தங்கையின் வருகைக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். 

அப்பொழுது ஒரு பாட்டி ஐந்தாறு பேருடன் சேர்ந்து புளியம்பழத்தை உடைத்து, நார் உருவி, கொட்டை எடுத்துக் கொண்டிருந்தார்.

அவர்களின் பேச்சு என் மனதிற்கு போதை அளித்ததாகத் தெரியவில்லை.  ஏதோ ஒன்னு மனதில் பளிச்சென்று வெட்டிச்சென்றது போலவும், அதனூடே நினைவுகள் வடிந்தது போலவும் உணர்ந்தேன்.
    
அது பழைய அனுபவம்தான் எனினும் புதுமலர்ச்சியைத் தந்தது. 

Continue reading “இனிக்கும் புளியம்பழம் – சிறுகதை”

மாவுக்கட்டு – சிறுகதை

மாவுக்கட்டு

சண்முகத்திற்கு வரன் பார்த்த எண்ணிக்கை, பெண் பார்க்கும் படலம் எல்லாம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்குப் போய் விட்டது.

காரணம் அவனுடைய கரடுமுரடான தோற்றம், முன் வழுக்கை, வீரப்பன் மீசை, சிவந்த கண்கள் இவையெல்லாம் அந்த பெண்களுக்கும், அவன் செய்யும் மத்திய போலீஸ் வேலை அந்தப் பெண்களின் பெற்றோர்களுக்கும் பிடிக்கவில்லை.

Continue reading “மாவுக்கட்டு – சிறுகதை”