மனித நேயம்

மனித நேயம்

ஆறாம் அறிவில் இத்தனை

வேற்றுமையா?

முற்றுப்பெறாத நிலவும்

முறைவிடாத உரிமையும்

பெரும் வெளிச்சம் தராது

உடைந்த கண்ணாடிச் சிதறல்கள்

ஒருபோதும் முழுமையான

உருவம் தராது Continue reading “மனித நேயம்”

எழுதுகோல்

எழுதுகோல்

எழுத்தின் தாய் எழுதுகோல்

எழுதுகோல் இல்லை எனில்

எழுதுபவரும் இல்லை உலகில்

எம்தேசியகவி பாரதியும் இல்லை

எம்தேசத்தின் கவிஞர்களும் இல்லை Continue reading “எழுதுகோல்”

பள்ளி செல்லுவோம்

பள்ளி

பள்ளி செல்லுவோம்

பள்ளி செல்லுவோம்

படிப்போடு பண்பாடும் தரும்

பள்ளி செல்லுவோம்

 

துள்ளி செல்லுவோம்

துள்ளி செல்லுவோம்

துடிப்போடு துவளாமல் தினந்தினம்

துள்ளி செல்லுவோம் Continue reading “பள்ளி செல்லுவோம்”

ஆசிரியர் – புதுக்குறள்

ஆசிரியர்

 

தாய் தந்தையாகி நண்பராகி மாணவர்

மனம் நிற்பவரே ஆசிரியர்

 

கற்று கொடுப்பவரும் வாழ்நாள் முழுதும்

கற்று கொள்பவரும் ஆசிரியர் Continue reading “ஆசிரியர் – புதுக்குறள்”

ஐந்துகர‌ சாமிக்கு அரகரானு பாடனும்

ஐந்துகர‌ சாமிக்கு அரகரானு பாடனும்

 

ஐந்துகர‌ சாமிக்கு அரகரானு பாடனும்!

அவனிருக்கும் தெருவெல்லாம் ஆடிபாடி சிரிக்கனும்!

மூஞ்சுறுன்னு எலிவாகனம் அதுக்குஎன்ன கொடுக்கனும்!

முற்றாத தேங்காயை உடைச்சுஅதுக்கு வைக்கனும்!

 

வண்ணவண்ண தோரணங்கள் தெருத்தெருவா கட்டனும்!

வாடாத அருகம்புல்லில் மாலைகட்டி சூட்டனும்!

கண்ணங்கருத்த யானை அவனதோளில் சுமக்கனும்!

கடைசியாக பச்சரிசி கொழுக்கட்டைய திங்கனும்!

 

தந்தம்ஒன்று உடைஞ்சதுக்கு காரணத்தை கேட்கனும்!

தரதரவென இழுத்துஅவன நடுவீதியில நிறுத்தனும்!

முந்தையநம் வினைகளையே தீர்த்திடத்தான் கேட்கனும்!

முழுநீள கரும்பெடுத்து அவனுக்கென்று படைக்கனும்!

 

சந்தனமும் சவ்வாதும் தெருமுழுக்க மணக்கனும்!

சந்தியில பொங்கலிட்டு ஊருக்கெல்லாம் கொடுக்கனும்!

கந்தனுக்கு மூத்தவனை கண்மூடி துதிக்கனும்!

காலம்முழுதும் குறைவின்றி அவனருளை கேட்கனும்!

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942