Category: கவிதை

  • ஆசிரியர் – புதுக்குறள்

    ஆசிரியர் – புதுக்குறள்

     

    தாய் தந்தையாகி நண்பராகி மாணவர்

    மனம் நிற்பவரே ஆசிரியர்

     

    கற்று கொடுப்பவரும் வாழ்நாள் முழுதும்

    கற்று கொள்பவரும் ஆசிரியர் (மேலும்…)

  • ஐந்துகர‌ சாமிக்கு அரகரானு பாடனும்

    ஐந்துகர‌ சாமிக்கு அரகரானு பாடனும்

     

    ஐந்துகர‌ சாமிக்கு அரகரானு பாடனும்!

    அவனிருக்கும் தெருவெல்லாம் ஆடிபாடி சிரிக்கனும்!

    மூஞ்சுறுன்னு எலிவாகனம் அதுக்குஎன்ன கொடுக்கனும்!

    முற்றாத தேங்காயை உடைச்சுஅதுக்கு வைக்கனும்!

     

    வண்ணவண்ண தோரணங்கள் தெருத்தெருவா கட்டனும்!

    வாடாத அருகம்புல்லில் மாலைகட்டி சூட்டனும்!

    கண்ணங்கருத்த யானை அவனதோளில் சுமக்கனும்!

    கடைசியாக பச்சரிசி கொழுக்கட்டைய திங்கனும்!

     

    தந்தம்ஒன்று உடைஞ்சதுக்கு காரணத்தை கேட்கனும்!

    தரதரவென இழுத்துஅவன நடுவீதியில நிறுத்தனும்!

    முந்தையநம் வினைகளையே தீர்த்திடத்தான் கேட்கனும்!

    முழுநீள கரும்பெடுத்து அவனுக்கென்று படைக்கனும்!

     

    சந்தனமும் சவ்வாதும் தெருமுழுக்க மணக்கனும்!

    சந்தியில பொங்கலிட்டு ஊருக்கெல்லாம் கொடுக்கனும்!

    கந்தனுக்கு மூத்தவனை கண்மூடி துதிக்கனும்!

    காலம்முழுதும் குறைவின்றி அவனருளை கேட்கனும்!

    இராசபாளையம் முருகேசன்

    கைபேசி: 9865802942

     

  • நீலவான இரவிலே

    நீலவான இரவிலே

     

    நீலவான இரவிலே

    மெல்ல நடக்கும் நிலவே

    பால்வண்ண நிறம் உனதோ – அந்த

    பன்னீரின் மணம் உனதோ

     

    மாலை மஞ்சள் உடல்முழுதும்

    உனக்கெனவே கொண்டவளே

    சோலைப்பூக்கள் இரவு முழுதும்

    பூத்திடவும் செய்பவளே (மேலும்…)

  • இன்று இப்படி – துளிப்பாக்கள்

    இன்று இப்படி – துளிப்பாக்கள்

     

    ஐம்பது ரூபாய் தட்சணை

    அத்தனையும் எனக்கே தருக

    ஆண்டவனுக்கே கட்டளை

    (மேலும்…)

  • மாணவர் – புதுக்குறள்

    மாணவர் – புதுக்குறள்

    பருவத்தில் சிறந்த பருவம் மாணவர்

    பருவம் உலகின் உருவம்

     

    கல்வி கருவறை பள்ளியின் வகுப்பறை

    மாணவ பருவத்தின் முதலறை

     

    வாழ்வில் சிக்கலிலா கோலத்தின் முதல்

    புள்ளி மாணவர் பள்ளி (மேலும்…)