ஆசிரியர் – புதுக்குறள்

ஆசிரியர்

 

தாய் தந்தையாகி நண்பராகி மாணவர்

மனம் நிற்பவரே ஆசிரியர்

 

கற்று கொடுப்பவரும் வாழ்நாள் முழுதும்

கற்று கொள்பவரும் ஆசிரியர் Continue reading “ஆசிரியர் – புதுக்குறள்”

ஐந்துகர‌ சாமிக்கு அரகரானு பாடனும்

ஐந்துகர‌ சாமிக்கு அரகரானு பாடனும்

 

ஐந்துகர‌ சாமிக்கு அரகரானு பாடனும்!

அவனிருக்கும் தெருவெல்லாம் ஆடிபாடி சிரிக்கனும்!

மூஞ்சுறுன்னு எலிவாகனம் அதுக்குஎன்ன கொடுக்கனும்!

முற்றாத தேங்காயை உடைச்சுஅதுக்கு வைக்கனும்!

 

வண்ணவண்ண தோரணங்கள் தெருத்தெருவா கட்டனும்!

வாடாத அருகம்புல்லில் மாலைகட்டி சூட்டனும்!

கண்ணங்கருத்த யானை அவனதோளில் சுமக்கனும்!

கடைசியாக பச்சரிசி கொழுக்கட்டைய திங்கனும்!

 

தந்தம்ஒன்று உடைஞ்சதுக்கு காரணத்தை கேட்கனும்!

தரதரவென இழுத்துஅவன நடுவீதியில நிறுத்தனும்!

முந்தையநம் வினைகளையே தீர்த்திடத்தான் கேட்கனும்!

முழுநீள கரும்பெடுத்து அவனுக்கென்று படைக்கனும்!

 

சந்தனமும் சவ்வாதும் தெருமுழுக்க மணக்கனும்!

சந்தியில பொங்கலிட்டு ஊருக்கெல்லாம் கொடுக்கனும்!

கந்தனுக்கு மூத்தவனை கண்மூடி துதிக்கனும்!

காலம்முழுதும் குறைவின்றி அவனருளை கேட்கனும்!

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

 

உன்னத உறவு

உன்னத உறவு

சத்தமில்லாமல் அறையின் கதவை மெதுவாகத் திறந்தான் குமார். தந்தையின் சட்டைப் பையிலிருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை தெரியாமல் எடுத்து அறையிலிருந்து விரைந்தான்.

அவன் முகம் மழையில் நனைந்த மரம் மழைநீரைச் சொட்டுவது போல, பயத்தில் வியர்வை சொட்டுக்களை வெளியேற்றியது. இரவு நேரம் என்பதால் அமைதி சூழ்ந்திருந்தது. Continue reading “உன்னத உறவு”

தக்க நேரத்தில் உதவி செய்

தக்க நேரத்தில் உதவி செய்

தக்க நேரத்தில் உதவி செய் என்ற கதை நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

பள்ளத்தூர் என்ற ஊரில் கன்னியப்பன் என்ற வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார்.

அவர் தன்னுடைய வியாபாரத்திற்கான பொருட்களைச் சுமப்பதற்கு கழுதையையும், வழிப்பயணத்தின் போது பாதுகாப்பிற்காக நாயையும் வளர்த்து வந்தார். Continue reading “தக்க நேரத்தில் உதவி செய்”

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று என்ற இப்பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய  நாச்சியார் திருமொழி என போற்றப்படும் திருப்பாவையின் இருபதாவது பாசுரம் ஆகும்.

கண்ணனையும், நப்பினையையும் ஆயர்குலத்துப் பெண்கள் பள்ளி எழுப்பும் பாசுரம் இது. Continue reading “முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று”