ஒருநாள் பாடம் – சிறுகதை

ஞாயிற்றுக்கிழமை தந்த சுகத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் மாதவி.

அழைப்பு மணி சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தாள். கடிகாரத்தை பார்த்தபோது மணி பத்தாகியிருந்தது. வீறிட்ட கொட்டாவியை கையால் சொடக்கு விட்டு அடக்கியபடி எழுந்தாள்.

கதவை திறந்து பார்த்தபோது யாரும் தென்படவில்லை. தரையில் யாரோ விசிறிப் போட்ட விளம்பர இதழ் ஒன்று கிடந்தது.

“சே, நல்ல தூக்கத்தை கெடுத்து விட்டான்” முணுமுணுத்தவாறு கதவை அறைந்து சாத்தினாள்.

Continue reading “ஒருநாள் பாடம் – சிறுகதை”

தத்துவத் தண்டனை – கவிதை

மனிதனைப் போல் பல உயிரினங்கள்
அதனைப் போலவே – பல அதுக்களை
உருவாக்கி விடுகின்றன
கொஞ்சம் கூட மூலமற்ற சூனியத்திலிருந்து…

Continue reading “தத்துவத் தண்டனை – கவிதை”

குறுநகை பூக்கள்

சுவரொட்டியில் இருந்த புல்வெளியை
கிழித்து மேய்ந்தது மாநகர மாடு

மின் கம்பங்களில் கூடமைத்துக் கொள்கின்றன
நகரத்து நாகரீக காக்கைகள்

Continue reading “குறுநகை பூக்கள்”

ஸ்கூட்டியில் வந்த தெய்வம் – சிறுகதை

நாகை நகரத்திலிருந்து பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் வாடிய மலரை போல் முகம் வாடி இருக்க, பின்னலிடாத தலையும், வண்ணம் தீட்டாத முகமும், திருத்தப்படாத புருவமும் வரையப்படாத கண்களில் கண்ணீர் வழிய, சிரிப்பை மறந்த முகத்துடன் ஒளி மங்கிய நிலவாய் அமர்ந்திருந்தாள் மாலதி.

கலங்கிய கண்களை புடவை தலைப்பில் ஒற்றி எடுத்துக் கொண்டிருக்கையில், தன்னருகில் வந்த கண்டக்டரைக்கூட கவனிக்காமல் அமர்ந்திருந்தாள்.

Continue reading “ஸ்கூட்டியில் வந்த தெய்வம் – சிறுகதை”