சந்தேகத்தின் சேதாரம் – சிறுகதை

ஆபிசிலிருந்து வீட்டிற்குச் செல்ல பஸ் நிறுத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தாள் மீனா.

அவளைக் கடந்து சென்ற வண்டியைக் கவனித்தாள்.

ஸ்கூட்டரில் இருப்பது தன் கணவன் ரகு மாதிரி இருந்தது. உற்று கவனித்தபோது அது ரகு தான் எனத் தெரிந்தது.

‘அப்படியானால் பின்னால் உட்கார்ந்திருக்கும் பெண் யார்?

Continue reading “சந்தேகத்தின் சேதாரம் – சிறுகதை”

வாழிய பாரதம்! வாழிய பாரதம்!

இந்தியா

வாழிய பாரதம்! வாழிய பாரதம்!
வாழிய வாழியவே!
எங்கள் பாரதம் வாழிய வாழியவே!

பாரதநாடு நம் நாடு
பண்பாடுகள் நிறைந்த நன்னாடு
வளங்கள் மிகுந்த பொன்னாடு
வாழிய எங்கள் திருநாடு

Continue reading “வாழிய பாரதம்! வாழிய பாரதம்!”

திருத்தணிகை நொண்டிச் சிந்து

முருகன்

கந்தாவுன் பேர்சொல்லி யே-நாங்கள்
காவடி தூக்கினோம் பாவடித் தோம்
சிந்தாலே பாட்டிசைத் தே-உன்
சீர்பல போற்றவே ஓர்ந்துநின் றோம்

மாமலை மீதிருந் தே-இந்த
மாநிலம் நோக்குதல் தானறிந் தோம்
கோமலை உன்மலை யே-எந்தக்
குன்றமும் நின்னடிக் குன்றிடு மே

Continue reading “திருத்தணிகை நொண்டிச் சிந்து”

ஒத்திகை – சிறுகதை

சாம்பு சாஸ்திரிகள் சந்தியாவந்தனத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு ‘சிவ சம்போ, மகாதேவா’ என முனங்கியபடியே பஞ்ச பாத்திரத்தை உத்தரணியுடன் சேர்த்துப் பிடித்தவாறே அதிலிருந்து ஜலத்தைத் துளசி மாடத்தில் விட்டார்.

அவரது வாய் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தது. வலது கை விரல்கள் எண்ணியபடியும், எண்ணி முடித்ததற்கு அடையாளமாக இடது கை விரல்கள் மடங்கிக் கொண்டும் இருந்தன.

Continue reading “ஒத்திகை – சிறுகதை”