சமோசா எல்லாருக்கும் பிடித்த சிற்றுண்டி. இதனை மாலையில் டீ குடிக்கும் போது, உடன் கடித்து உண்ணலாம்.
கோதுமை மாவினைப் பயன்படுத்தி, சுவையான சமோசா செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். Continue reading “சமோசா செய்வது எப்படி?”
இணைய இதழ்
சமோசா எல்லாருக்கும் பிடித்த சிற்றுண்டி. இதனை மாலையில் டீ குடிக்கும் போது, உடன் கடித்து உண்ணலாம்.
கோதுமை மாவினைப் பயன்படுத்தி, சுவையான சமோசா செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். Continue reading “சமோசா செய்வது எப்படி?”
தேவையான பொருட்கள்
கடலை மாவு : 2 கிலோ
சோடாஉப்பு : 1 சிட்டிகை
டால்டா : 200 கிராம்
மிளகாய்தூள் : 10 கிராம்
நல்லெண்ணெய் : 500 கிராம்
பெருங்காயம் : சிறிதளவு
மிளகு பொடி : சிறிதளவு
உப்பு : சிறிதளவு
வெள்ளபூடு பொடி : சிறிதளவு
அரிசிமாவு : 100 கிராம்
செய்முறை
கடலைமாவு, அரிசிமாவுடன் மிளகாய்தூள், பெருங்காயம் பூடு மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். உப்பு, தண்ணீர் சேர்த்து கட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் காரச் சேவு தேய்க்கும் கரண்டியில் சிறிதளவு மாவை வைத்து நன்றாக அழுத்தி தேய்க்கவும். மற்றொரு கரண்டியால் சேவை திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய வைக்கவும். சுவையான காரச் சேவு ரெடி!
(முறுக்கு குழலில் பிழிந்து தயார் செய்தும் உதிரியாக்கி கொள்ளலாம்.)
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை : 200 கிராம்
மிளகாய் வற்றல் : 2
தேங்காய் துருவல் : 1 கப்
கடுகு உளுந்து : 1 டீஸ்பூன்
உப்பு : தேவையானது
பெருங்காயம் : ½ டீஸ்பூன்
எண்ணெய் : தாளிக்க
செய்முறை
கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
குக்கரில், கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, மிளகாய், வற்றல் சேர்த்து வதக்கி கடலையில் கொட்டி கிளறவும். பின்பு தேங்காயைச் சேர்த்து, கிளறி பறிமாறவும். சுவையான கொண்டைக்கடலை சுண்டல் ரெடி!
தேவையான பொருட்கள்
மாவு : ½ கிலோ
தேங்காய் எண்ணெய் : 300 மி.லி.
வெண்ணெய் : 1 மேசைக்கரண்டி
தண்ணீர்
உப்பு : 1 டீஸ்பூன்
செய்முறை
மாவைச் சலித்து பாத்திரத்தில் போட்டு வெண்ணெய் உப்பு இவற்றை நன்கு கலந்து கொள்ளவும். பின் தண்ணீர் விட்டு ஒன்று சேரப்பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்தி மாவு உருண்டைகளை விட சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். (500 கிராம் மாவில் 8 புரோட்டா வரும்)
உருண்டைகளின் மீது தேங்காய் எண்ணெய் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும். இந்த எண்ணெயயே புரோட்டா விரிப்பதற்கும் எடுத்துக் கொள்ளலாம்.
மாவு உருண்டைகளை, எண்ணெய் தடவிய பெரிய பலகையில் பூரிக்கட்டையில் மெல்லிய துணி போன்றிருக்கும் மாவை சேலைக்கொசுவம் மடிப்பது போல் குட்டிச் சுருக்கங்கள் செய்து அப்படியே இருபுறமும் சுருட்டிக் கொண்டு வந்து ஒன்றன் மேல் ஒன்று வைத்து விடவும்.
இவ்வாறு புரோட்டா இட்டபின் தோசை சட்டியை சுடவைக்கவும். புரோட்டா சுருக்கிய உருண்டைகளாக இருக்கிறதல்லவா அதை கைவிரல் கொண்டு சுருக்கம் கலையாது விரித்து விடவும். எண்ணெய் ஊற்றாமல் புரோட்டாவை தோசை சட்டியில் போட்டு (சிறு தீயில்) எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இவ்வாறு வாட்டிய புரோட்டாக்களை 2 தினம் வைத்திருந்தாலும் கெட்டுப்போகாது. பிரிட்ஜில் செய்து வைத்துக் காற்றுப் புகாத பாலிதீன் பைகளில் வைத்துக் கொண்டு தேவையான சமயம் பயன்படுத்தலாம்.
இந்த வறண்ட புரோட்டாக்களை பூரிமாதிரி, குழிந்த வாணலியில் நிறைய எண்ணெய் விட்டு சுட்டால் பொறுபொறுவென்று இருக்கும். இம்மாதிரி இருமுறை புரோட்டாவை முதலில் வெறும் தோசைச் சட்டியிலும், மற்றொரு முறை எண்ணெயிலும் பொரிப்பதால் புரோட்டாவின் உள்பக்கமும் வெந்து சுவையானதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி : 1 ஆழாக்கு
குடை மிளகாய் : 1
காரட் : 1
பீன்ஸ் : 100 கிராம்
கோஸ் : 100 கிராம் (துருவியது)
புதினா : 1 கட்டு (சிறியது)
பச்சைமிளகாய் : 5
வெள்ளை மிளகுபொடி : 1 டீஸ்பூன்
அஜினோ மோட்டோ : 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் : தேவையான அளவு
செய்முறை
அரிசியை ஒன்றுக்கு இரண்டு என்கிற அளவில் நீர்விட்டு வேக வைக்கவும். சாதம் உதிராக இருக்க வேண்டும். காய்கறிகளை 1 அங்குல நீளத்திற்கு நறுக்கி, பச்சைமிளகாய் சேர்த்து முக்கால் வேக்காடாக வேக வைக்கவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு புதினா இலைகளை போட்டு வதக்கவும். பின்னர் காய்கறிகளை போட்டு, உப்பு சேர்த்து ஒரு தடைவ புரட்டி ஆறிய சாதத்தில் கொட்டவும்.
அஜினோ மோட்டோ, வெள்ளை மிளகு பொடியும் சேர்த்து எல்லாவற்றையும் கலக்கவும். சைனீஸ் புலாவ் ரெடி.