பொங்கல் நாளில் தங்கும் இன்பம்
எங்கள் வாழ்வில் தொடர வேண்டும்!
பொங்கல் நல்வாழ்த்துகள்!
தைமகளை, தமிழ் மகளைத்
தமிழ் மக்கள் போற்றிடும் நாள்
உறவுகளை நட்புதனை
அன்புதனைப் பெருக்கிடும் நாள்!
ஆள்க நீ தமிழ்மகளே!
எழிலிடை எழுகதிரே எருதுகள் உழுநிலமே
பொழிலிடை எழுமலரே புதுப்புனல் தருநதியே
வழியிடை வருநிலவே வளர்தரு நிலத்திணையே
கழிமடம் தமிழ்நிலத்தில் கழிந்ததென் றறைகுகவே
திருக்குறளும் செங்கோட்டை ஆவுடையக்காவின் வேதாந்தப் பாடல்களும்
காலந்தோறும் வகுக்கப் பெற்ற ஒட்டு மொத்த எண்ணப் பிழிவுகளும் அதன் உண்மைத் தன்மையும், பிற உயிர்களின் மேன்மைக்கும் வாழ்க்கைத் தீர்வுகளுக்கும் எவ்விதமாய் அடித்தளமாக இருக்கின்றன என்பதே அற இலக்கிய வரலாறாக இருக்கின்றது.
Continue reading “திருக்குறளும் செங்கோட்டை ஆவுடையக்காவின் வேதாந்தப் பாடல்களும்”மொழி வளம்
நம் பாரத நாட்டில் பேச்சு வழக்கில் மட்டுமிருக்கும் மொழிகள், எழுத்து வடிவிலும் இருக்கும் மொழிகள் என அநேகம் இருந்தன.
நம்மிடையே இரண்டாயிரத்திற்கும் மேம்பட்ட மொழிகள் இருந்துள்ளன. படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்பது நமது கொள்கை.
அம்மனிதர்கள் உருவத்தாலும், குணத்தாலும், நிறத்தாலும், திறமையாலும் வேறுபட்டிருப்பது போல் மொழிகளும் மாறுபட்டிருந்தன.
Continue reading “மொழி வளம்”