“மோட்டார் ஆன் பண்ணிருக்கேன், அரைமணி நேரம் கழிச்சு நிறுத்திடுப்பா” என்று அப்பா சொல்லிச் சென்றது, அப்பொழுது தான் எனது நினைவிற்கு வந்தது.
உடனே, மேல்மாடிக்கு விரைந்து சென்றேன். எதிர்பார்த்தபடியே, நீர்த்தொட்டி நிறைந்து, அதிகப்படியான நீரை குழாயின் மூலம் ஊற்றிக் கொண்டிருந்தது. மாடி தளத்திலும் நீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.
“ச்சே, இவ்வளவு தண்ணி வீணா போச்சே” என்று வருந்தினேன். மேலும் நீர் வீணாகாமல் தடுக்க, கீழே சென்று ஒரு வாளியை எடுத்து வந்து, தொட்டியிலிருந்து வெளியேரும் நீரை சேகரிப்பதற்கு வைத்தேன்.
தொட்டியின் மேற்பகுதியில் இருந்த குழாயிலிருந்து நீர் வெளியேறி கீழே இருந்த வாளியில் இரைச்சலுடன் விழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வாளியில் நீரின் அளவு உயர்ந்து கொண்டு வந்தது.
Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 2- நீரோட்டம்”