விளிம்பில் நிகழும் அற்புதங்கள் – சிறுகதை

விளிம்பில் நிகழும் அற்புதங்கள்

சுஜித்துக்கு இந்த உணவு டெலிவரி செய்யும் வேலை சுத்தமாக பிடிக்கவில்லை. அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் எம் பி ஏ படித்து முடித்திருப்பான்.

எவ்வளவு வைத்தியம் பார்த்தும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. எம் பி ஏ இரண்டாவது செமெஸ்டரிலேயே அப்பா இறந்துவிட்டார். அப்பாவுடன் ஆஸ்ப்பிட்டலில் இருந்ததால் ஒரு சில பேப்பரை தவிர எல்லாமுமே அரியர்.

நீச்சல் தெரியாதவனை நடுக்கடலில் தூக்கி போட்டது போல், காலம் சுஜித்தை தூக்கி எறிந்து விட்டது. உடனடியாக இந்த வேலைதான் கிடைத்தது.

அப்பாவின் டூ வீலரை ஆசைக்கு கூட ஓட்டிப் பார்க்கத் தரமாட்டார். இப்போது மொத்த வாழ்க்கையும் இந்த டூ வீலரில் கழிகிறது.

Continue reading “விளிம்பில் நிகழும் அற்புதங்கள் – சிறுகதை”

நவக்கிரகங்களும் மனித வாழ்க்கையும்

நவக்கிரகங்களும் மனித வாழ்க்கையும்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீக்கிப் பிறத்தல் என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் கூறுகிறார்.

தமிழ் மொழியின் தலைசிறந்த பெண்பாற் புலவர் ஒளவையார் என்பது தமிழ் இலக்கிய வரலாறு கூறும் உண்மை ஆகும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அளவற்ற ஆற்றல்கள் பொதிந்து உள்ளன‌. அதை வெளிக்கொணர்வதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

Continue reading “நவக்கிரகங்களும் மனித வாழ்க்கையும்”

மருத்துவமனையின் ஒருநாள் வாழ்க்கை

மருத்துவமனையின் ஒருநாள் வாழ்க்கை

வண்ண வண்ண பூக்களெல்லாம்

வாசம் வீசுவதில்லை

எண்ணம்போன போக்கிலெல்லாம்

வாழ்க்கை வருவதில்லை

Continue reading “மருத்துவமனையின் ஒருநாள் வாழ்க்கை”

அட்மிஷன் – சிறுகதை

அட்மிஷன்

அட்மிஷன் போடுவதற்கு, ஃபைலில் மலை போல் குவிந்து கிடந்த விண்ணப்ப படிவங்களைப் பரிசீலனை செய்யத் தயாரானார் வெங்கடேஸ்வரன்.

அவரது பெயருக்குக் கீழே ‘ஹெட்மாஸ்டர்’ என்று பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை ஒன்று டேபிளில் அவர் முன் காட்சியளித்தது.

ஏதோ கேட்பதற்காகக் காலிங் பெல்லை அழுத்தி பியூனை அழைத்தபோது டேபிளை அலங்கரித்த போன் இவரை அழைத்தது.

ரிசீவரை எடுத்துக் காதில் வைத்த போது எதிர்முனையில் “இஸ் மிஸ்டர் வெங்கடேஸ்வரன் அவைலபிள்?” என்றதோர் குரல் கேட்டது.

Continue reading “அட்மிஷன் – சிறுகதை”