வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி?

வாழைக்காய் பஜ்ஜி

வாழைக்காய் பஜ்ஜி ரோட்டுக் கடைகளிலும் கிடைக்கும் அற்புதமான சிற்றுண்டி. இதனைச் சுவையாகவும், எளிதாகவும் கடைகளில் கிடைப்பதைப் போன்ற சுவையுடனும் செய்யலாம்.

இதனைத் தயார் செய்ய சிறிதளவே நேரம் பிடிக்கும்.

பஜ்ஜிக்கான மாவை சரியான பதத்தில் கரைத்தால் சுவை மிகும்.

பண்டிகை நாட்களிலும் விருந்தினர்களின் வருகையின் போதும் இதனைச் செய்து அசத்தலாம்.

Continue reading “வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி?”

இயற்பகை நாயனார் – மனைவி தானம்

இயற்பகை நாயனார்

இயற்பகை நாயனார், இறைவனால் கொடுக்கப்பட்ட அனைத்தும் இறையடியாருக்குச் சொந்தம் என்ற எண்ணத்தில், சிவனடியாருக்குத் தன் மனைவியை தானமாக அளித்தவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவரைப் பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் முன்பு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய பெயர் இயற்பகையார் என்பதாகும். அவர் சிவனிடத்தில் மாறாத அன்பு கொண்டிருந்தார்.

Continue reading “இயற்பகை நாயனார் – மனைவி தானம்”

கனலி – கலை இலக்கிய இணைய இதழ்

கனலி

‘கனலி’ கலை இலக்கிய இணைய இதழ், டிசம்பர் 2019-ல் ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 2021-க்குள்  பன்னிரெண்டு இதழ்கள் மட்டுமே வெளி வந்திருக்கும் இதழ். இவ்விதழ் ஆழமும் அகலமும் அடர்த்தியும் மிக்கதான தமிழின் மிக முக்கியமான இணைய மாத இதழாகும்.

மொழி பெயர்ப்பு இலக்கியங்களைக் கண்டுணர வேண்டும் என்றால், படிக்க வேண்டிய இதழ் இவ்விதழாகும். அற்புதமான மொழி பெயர்ப்புக் கட்டுரைகள், நேர்காணல்கள், தேடிப் படிக்க உகந்தவைகள் நிறைய உள்ளன.

நவீனத்தை நோக்கிய இளைஞர்களுக்கான இலக்கிய முதிர்ச்சிக்கு, முயற்சிக்கு வித்திடும் இக்காலத்திற்கான இணையதளம் கனலி இணையதளம் ஆகும்.

Continue reading “கனலி – கலை இலக்கிய இணைய இதழ்”

ராஜாவும் வயிறும் – சிறுகதை

ராஜாவும் வயிறும்

அவன் டைரியின் பக்கங்களை வாசித்துக் கொண்டேயிருக்கிறேன்.

முடிந்தால் நீங்களும் என் அருகில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்; வாய்விட்டு வாசிக்கிறேன்; அவன் வலிகளை கேட்டுக் கொள்ளுங்கள்!

இனி இயற்கையை சுவாசிக்க முடியாது என்கிற ‘சந்தேக சந்தர்ப்பம்’ ஏற்படுகிறபோது, எந்த வகையில் இயற்கை கொடுத்த வாழ்வை நேசிக்கலாம் என்கிற வினாவினை, ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் வேள்வியாக்கிக் கேள்வியாகக் கேட்கிறது அவன் மனம்.

அந்த ஒவ்வொரு நொடியும் உன்னதமாகப்படுகிறது அவனுக்கு. வாழ்க்கை அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது.

உலகம் பரந்து விரிந்த தேடல் நிறைந்த அதிசயமாகத் தெரிகிறது.

மனம் கவிஞனாகி கவி பாடுகிறது.

ஆனால் அந்த ஒவ்வொரு நொடியும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியாவது மீண்டு விட வேண்டும். இன்னும் கொஞ்ச காலம் இயற்கையில் இணைந்து இயல்பாக வாழ்ந்துவிட வேண்டும் எனும் வைராக்கியத்தோடு மருத்துவமனைக்கு புறப்பட்டான்.

Continue reading “ராஜாவும் வயிறும் – சிறுகதை”