கொள்ளு சட்னி செய்வது எப்படி?

சுவையான கொள்ளு சட்னி

கொள்ளு சட்னி அருமையான சட்னி ஆகும்.

கொள்ளு சத்துள்ள உணவுப் பொருள் ஆகும். இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு என்பது பழமொழி.

கொள்ளின் நன்மைகள் அறிய இங்கே சொடுக்கவும்.

எளிய முறையில் கொள்ளு சட்னி சுவையாக எப்படி செய்வது என்பது பற்றிப் பார்ப்போம். Continue reading “கொள்ளு சட்னி செய்வது எப்படி?”

காலம் மாறும் போது

காலம் மாறும் போது

காலம் மாறும் போது ஒவ்வொருவரும் தங்களுடைய நிலைகளை மாற்றிக் கொள்கின்றனர்.

கடின முயற்சியினை உடையவர்கள் காலத்தின் மாற்றத்தினால் முயற்சியில்லாதவர்களாக மாறி விடுகின்றனர். இதனையே இக்கதை விளக்குகிறது. வாருங்கள் கதை பற்றிப் பார்ப்போம்.

முறப்பநாடு என்ற நாட்டினை சூரசேனன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். ஒரு நாள் சூரசேனனும் அவனுடைய அமைச்சருமான வீரசேனனும் நாட்டில் உள்ள குடிமக்களை நேரில் பார்த்து வரவேண்டும் என்று எண்ணி மாறுவேடத்தில் நாட்டிற்குள் பயணித்துக் கொண்டிருந்தனர். Continue reading “காலம் மாறும் போது”

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்குஎரிய

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌ என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய  கோதை தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் ஒன்பதாவது பாசுரம் ஆகும்.

இந்த உலகில் உள்ள இன்பங்கள் எல்லாம் நிலையானவை என்று எண்ணி உலக மக்கள் அதில் மூழ்கி இருக்கின்றனர். அவை நிலையானவை அல்ல. திருமாலே நிலையானவர்.

ஆதலால் இறைவனைப் போற்றிப் பாடி, நிலையான இன்பத்தைப் பெற வாருங்கள் என்று இப்பாசுரம் அழைக்கிறது.

Continue reading “தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌”

சத்தை ஏர் மூக்கையா – கதை

சத்தை ஏர் முத்தையா

சத்தை ஏர் மூக்கையா ஓர் ஏழை விவசாயக் கூலியின் கதை.

நமது கிராமங்களில் பச்சைப் பசேலென பச்சைப் பாயை விரித்தாற்போல் எங்கும் பசுமையாக இருந்த பலவிளைநிலங்கள், இன்றைக்கு தரிசுக் காடாகவும், வீட்டு மனைகளாகவும் காட்சி தருகின்றன.

அப்படியாகத்தான் தஞ்சைத் தரணியின் சூரப்பள்ளம் எனும் அழகிய கிராமமும் காலத்தின் போக்கினால், மாறுபட்டு முற்றிலுமாக கலையிழந்து நிற்கிறது.

காலத்தின் மாற்றம், விஞ்ஞான வளர்ச்சி என்று பெருமை பீத்திக் கொள்ளும் சனங்களுக்கு மத்தியில் அகப்பட்டும், உட்பட்டும் போராடி தத்தளிக்கும் பாமர ஏழை விவசாயி சத்தை ஏர் மூக்கையா என்ற‌ ஒருவரோடு சேர்ந்துதான் நாம் சிறிது நேரம் பயணிக்கப் போகிறோம்.

“ஏங்க; உங்களே! உங்களே!

கெவர்மண்டு ஆபிசர் வந்திருக்காவோ

போயிட்டு என்னானு பாருங்க”

என்று பொன்னம்மாள் மாட்டுக்குத் தண்ணீர் வைத்துக் கொண்டிருந்த கணவரான சத்தை ஏர் மூக்கையாவை உசுப்பினாள்.

“வாங்க சாமி, கும்பிடுரோனுங்க”

Continue reading “சத்தை ஏர் மூக்கையா – கதை”

குப்பை நாற்றம் – அறிவியல் குறுங்கதை

குப்பையின் நாற்றம்

அன்றோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. எனவே, ஆசிரியர்கள் நிதானமாக அவர்களுக்குள் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.

இன்னும் இரண்டு வாரகாலம் விடுமுறை இருந்ததால், அந்நாட்களது அலுவல்கள் குறித்தான கலந்துரையாடலாகவே அது அமைந்திருந்தது.

சிலர், உறவினர்கள் வீட்டுக்குச் செல்வது குறித்தும், சிலர் சுற்றுலாத் தளங்களுக்கு செல்வது குறித்ததுமான பேச்சுக்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

சில நண்பர்கள் அன்று இரவே தங்களது சொந்த ஊருக்கு பயணப்பட வேண்டியிருந்ததால், அவர்கள் விரைவாக அங்கிருந்து விடைபெற்றனர். Continue reading “குப்பை நாற்றம் – அறிவியல் குறுங்கதை”