• பூரி செய்வது எப்படி?

    பூரி செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    மைதாமாவு : 300 கிராம்
    உப்பு : 1 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் : 1 மேஜைக்கரண்டி (மேலும்…)

  • இனிப்பு ஆப்பம் செய்வது எப்படி?

    இனிப்பு ஆப்பம் செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    பச்சரிசி : 1 கிலோ
    புழுங்கலரிசி : 1 கிலோ
    உளுந்து : ½ கிலோ (மேலும்…)

  • பக்கடா செய்வது எப்படி?

    பக்கடா செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    கடலைமாவு : 400 கிராம்
    அரிசிமாவு : 100 கிராம்
    நெய் : 1 கரண்டி
    எண்ணெய் : 1 கரண்டி
    முந்திரிப்பருப்பு : 25 கிராம்
    பூண்டு : 4 பல்
    வெங்காயம் : 100 கிராம்
    பச்சைமிளகாய் : 8
    இஞ்சி : சிறுதுண்டு
    சோடா உப்பு : தேவையான உளவு
    கருவேப்பிலை : சிறிதளவு
    சுடுவதற்கு எண்ணெய்

     

    செய்முறை

    ஒரு தாம்பாளத்தில் வெட்டிய வெங்காயம், மிளகாய், பூண்டு, இஞ்சி, நெய், எண்ணெய், உப்பு, சோடா உப்பு, போட்டு நுரைக்கத் தேய்த்து பின் இரண்டு மாவு, முந்திரிப்பருப்பு போட்டு சிறு தண்ணீர் சேர்த்துத் தேய்த்து கெட்டியாகப் பிசைந்து, எண்ணெயில் உதிர்த்து விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும். சுவையான பக்கடா ரெடி!

     

  • கருப்பட்டி இடியாப்பம் செய்வது எப்படி?

    கருப்பட்டி இடியாப்பம் செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    பச்சரிசி : 600 மி.லி. (இடித்து அவித்து சல்லடையில் சலித்து வைக்கவும்)
    கருப்பட்டி : ¼ கிலோ
    தண்ணீர் : 400 மி.லி. அல்லது 2 டம்ளர்

     

    செய்முறை

    கருப்பட்டியைத் தட்டிப்போட்டு தண்ணீர் விட்டு கருப்பட்டி கரைந்து கொதித்ததும் மாவில் வடிகட்டிவிட்டு உடனே நன்றாகப் பிசைந்து மாவு சூடாக இருக்கும் போதே பிழிந்து வேக வைத்து தேங்காய்பூ தூவவும். சுவையான கருப்பட்டி இடியாப்பம் ரெடி!

     

  • இடியாப்பம் செய்வது எப்படி?

    இடியாப்பம் செய்வது எப்படி?

    இடியாப்ப மாவு தயாரிக்கும் முறை

    பச்சரிசியை இடித்து மாவு தயாரிக்கவும்

     

    செய்முறை

    இடித்த மாவை வறுத்தும் இடியாப்பம் செய்யலாம். மாவை, மாவு இலேசாகி பறக்கும் வரையில் வறுத்துச் சலித்துக் கொள்ளவும்.

    மாவை இட்லிச்சட்டியில் ஒரு துணியில் வைத்து விரலினால் உருட்டினால் உருளும் வரை அவித்து, (உடனே கட்டியை எடுத்துவிட்டு) ரவை சல்லடையினால் சலித்து, கட்டியை மீண்டும் இடித்து சலித்து கடைசியில் பொடிக்கண் சல்லடையில் சலித்து விரிந்த தட்டில் உலர வைக்கவும்.

    இவ்விரண்டு முறையிலும் மாவு தயார் செய்து பல நாட்கள் கெடாமல் டின்களில் வைக்கலாம்.

    தண்ணீரைக் கொதிக்க வைத்து மாவில் ஊற்றி உப்புப்போட்டு பிசைந்து சூடாக இடியாப்பக் குழலில் பிழிந்து இட்லிப்பானையில் அவித்து எடுக்கவும்.சுவையான இடியாப்பம் ரெடி!