• சேமியா கேசரி செய்வது எப்படி?

    சேமியா கேசரி செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    சேமியா : 500 கிராம்
    சர்க்கரை : 400 கிராம்
    தண்ணீர் : 400 மி.லி.
    நெய் : தேவையான அளவு
    முந்திரி பருப்பு : 2 (தேவையான அளவு)
    ஏலக்காய் : 4 (தேவையான அளவு)
    கேசரி பவுடர் : சிறிதளவு

     

    செய்முறை

    சேமியா, முந்திரிப்பருப்பு தனித்தனியாக நெய்யில் வறுக்கவும். வாணலியில் தண்ணீர் கொதித்ததும் சேமியா போட்டு கிளறி வேகவிடவும்.

    சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து முந்திரிபருப்பு, மீதியுள்ள நெய், கேசரி பவுடர் ஆகியவற்றை போட்டு கிளறி இறக்கவும். பிறகு ஏலப்பொடி சேர்க்கவும்.

    பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும். சுவையான சேமியா கேசரி தயார்.

     

  • கோதுமை இட்லி செய்வது எப்படி?

    கோதுமை இட்லி செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    கோதுமை : 300 கிராம்
    உளுந்தம் பருப்பு : 75 கிராம் (மேலும்…)

  • கருப்பட்டி இட்லி செய்வது எப்படி?

    கருப்பட்டி இட்லி செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    புழுங்கல் அரிசி : 500 கிராம்
    உளுந்தம் பருப்பு : 125 கிராம்
    கருப்பட்டி : 1 கிலோ கிராம்

     

    செய்முறை

    அரிசி போடும் அளவிற்கு நாலில் ஒரு பாகம் உளுந்தம்பருப்பு போட வேண்டும். அரிசியை நன்றாகத் தண்ணீர் விட்டு நனைய வைத்து கிரைண்டரில் இட்டு நன்றாக ஆட்டவும்.

    உளுந்தம்பருப்பையும் நன்றாக நனைய வைத்து, அதையும் கிரைண்டரில் இட்டு, தண்ணீர் தெளித்து வெண்ணெய் போல் ஆட்டவும்.

    இரண்டு மாவுகளையும் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். காலையில் மாவில் ¼ ஸ்பூன் சோடா உப்பு, தேங்காய்ப்பூ விருப்பமான அளவு, கருப்பட்டி பால் கெட்டியாகக் காய்ச்சி இலேசான சூடாகவோ அல்லது ஆறவிட்டோ வடிகட்டி மாவில் விட்டுக் கிளறவும்.

    இட்லித் தட்டில் வேக வைக்கவும். விருப்பப்படி இனிப்பை குறைக்கவோ, கூட்டவோ செய்யலாம். சுவையான கருப்பட்டி இட்லி தயார்.

    இந்த மாவை இளஞ்சூட்டில் தோசையாக எண்ணெய் அல்லது நெய் விட்டுச் சுடலாம்.

     

  • ஏன் இன்ஜினியரிங் படிக்கனும்?

    ஏன் இன்ஜினியரிங் படிக்கனும்?

    நடந்து முடிந்த கல்வி மன்ற தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த இன்ஜினியரிங் படிப்பு படு தோல்வி அடைந்தது. எதிர் கட்சியாக இருந்த கலை மற்றும் அறிவியல் படிப்பு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்று பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

    (மேலும்…)

  • தம்மபதம் – புத்த சமய அற நூல்

    தம்மபதம் – புத்த சமய அற நூல்

    தம்மபதம் என்ற பொக்கிசத்தை நான் நீண்ட தேடலுக்குப் பின்னே கண்டு கொண்டேன்.

    எழுபதுகளில் குமரி மாவட்டத் தமிழ்ச் சங்கம், பேராசிரியர் ஆபிரகாம் அருளப்பனார் தலைமையில், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகில், சனிக்கிழமைகளில் கூடும்.

    கல்லூரி மாணவனான நான் தவறாமல் அதில் கலந்து கொள்வேன். அங்கு வருவோரில் நான் தான் மிக இளையவனாக இருப்பேன். ஐயங்கள் கேட்பேன்; தெளிவான பதிலைப் பெறுவேன்.

    ஒருநாள் ஒருவர் ‘தம்ம பதமும் திருக்குறளும்’ என்று ஓர் ஆய்வுக் கட்டுரை வாசித்தளித்தார். அதுவரை தம்மபதம் என்ற நூலைப் பற்றி நான் கேள்விபட்டதேயில்லை.

    (மேலும்…)