உண்ணும் உணவை வணிகமாக்கி
உழவைத் தொழிலாய் மாற்றுதற்குப்
பண்ணும் செயலே செறிவூட்டம்
பன்னாட் டரசின் சதித்திட்டம்
எண்ணும் எழுத்தும் எப்பொழுதும்
ஏமாற் றுதற்கே துடிதுடிக்கும்
மண்ணும் உயிரும் இவர்களுக்கு
மாபெரு சந்தை தவிர வேறிலையே!
வேண்டும் இன்னுமொரு விடுதலை! – ஆதிகவி (எ) சாமி.சுரேஷ்
எத்தனை விறகுகள் எரிந்தனவோ
விடுதலைப் பருக்கைகள் வேகுதற்கே
எத்தனைக் கனவுகள் கலைந்தனவோ
இத்தரை விடியலில் எழுவதற்கே
எத்தனை விளக்குகள் அணைந்தனவோ
இத்தரை ஒளியினில் சுடர்வதற்கே
எத்தனை உயிர் மாய்ந்தனவோ
இத்தரை உணர்வினைக் காப்பதற்கே
போகிப் பண்டிகை – கவிதை
ஆதியும் சரியில்லை
ஆணி வேரும் சரியில்லை
சாத்தானின் பழம்
சாப்பிட்டதால் சாபம்
பெற்ற பூமி இது…
இங்கே
பச்சை மைக்குப் பணம்
கொடுக்கிறான்…
கருப்பு மைக்குப் பணம்
வாங்குகிறான்…
பித்தலாட்டம் – கதை
வண்டியூர் கிராமத்தில், உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள் ஒரு பெரிய கட்சியின் சார்பாக தேர்தலில் களம் இறங்கினர்.
Continue reading “பித்தலாட்டம் – கதை”தேர்தல் – கவிதை
முதல் போட்ட
வியாபாரம்தான்.
எல்லாம் இலவச மயமானாலும்
முதலாளிக்கு நஷ்ட மயமானதில்லை!
Continue reading “தேர்தல் – கவிதை”