அழகு பேரழகு – கவிதை

எது அழகு என்று பட்டியல் கொடுக்கிறார் கி.அன்புமொழி. இந்தக் கவிதை படித்தபின் நாம் பார்க்கும் அனைத்துமே அழகாய்த் தெரிகிறது.

உன்னிலும் உண்டு அழகு
என்னிலும் உண்டு அழகு
மண்ணிலும் உண்டு அழகு
கண்ணிலும் உண்டு அழகு
உருவத்தின் அழகு அழகல்ல
உள்ளத்தின் அழகே அழகு!

பறக்கும் பறவை அழகு
பிறக்கும் குழவி அழகு
மறக்கும் தீமை அழகு
உறங்கும் இரவும் அழகு
திறக்கும் மனம் அழகு
கறக்கும் பாலும் அழகு
துறக்கும் ஆசை அழகு!

Continue reading “அழகு பேரழகு – கவிதை”

இனிது என்னும் பூந்தேன் இதழ்

இனிது

திக்கெட்டும் வாழன்பர் சேர்க்கும் படைப்புகளை

மிக்கநலம் தோன்ற வெளியிட்டு – மக்கள்

மனதெல்லாம் அள்ள மலருமே என்றும்

இனிதென்னும் பூந்தேன் இதழ்

இமயவரம்பன்

அழகுசாதனப் பொருட்களின் கோரமுகம் பற்றி தெரியுமா?

அழகுசாதனப் பொருட்களின் கோரமுகம்

அழகுசாதனப் பொருட்களின் கோரமுகம் பற்றி நாம் எல்லோரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களாகிய நாம் எல்லோரும் அழகாக இருக்கவே விரும்புகிறோம். அழகு தன்னம்பிக்கையை அளிக்க கூடியதும் கூட.

நம்முடைய அழகினைக் கூட்ட நம்முடைய அன்றாட வாழ்வில் பற்பசை முதல் வாசனைத் திரவியம் வரையிலான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துகிறோம். Continue reading “அழகுசாதனப் பொருட்களின் கோரமுகம் பற்றி தெரியுமா?”